ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

0
35

 

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரகண்டில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆன பின்னர் இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், கொரோனா காரணமாகவும் இமய மலைக்கு செல்வதை தவிர்த்தார்.

 

ஆனால் இந்த முறை இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்றுள்ளார். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சென்றுள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று(ஆகஸ்ட்10) வெளியானது.

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அதாவது ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது நண்பர்களுடன் இமயமலை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

இமயமலை பயணத்தில் முதல் நாளில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அங்கு இருக்கும் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் துறவிகளின் சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்த நடிகர் ரஜினிகாந்த் துறவிகளுடன் சொற்பொழிவு ஆற்றினார்.

 

பின்பு அவர்களுக்கு உணவு அளித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ரிஷிகேஷில் உள்ள சில கோயில்களுக்கும் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.