மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த்!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

0
60
#image_title

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த்!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையும் புதிய பிஎம்டபிள்யூ காரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று(செப்டம்பர்10) சென்னையில் ஜெயிலர் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும் பணியாற்றிய அனைவருக்கும் ஜெயிலர் என்று அச்சடிக்கப்பட்ட தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மலேசிய பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் அவர்களை சந்தித்து பேசினார். சந்திப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தித் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “இன்று(செப்டம்பர்11) ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான சூப்பர்ஸ்டார் என்ற பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் வருகையைப் பெற்றேன்.

எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். சாதாரணமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில், எதிர்காலத்தில் அவரது படங்களில் நான் சேர்க்க முயற்சிக்கும் சமூகக் கூறுகளுடன் நிச்சயமாக தொடர்புடையது. ரஜினிகாந்த் தொடர்ந்து களத்திலும், திரையுலகிலும் சிறந்து விளங்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.” என்று மலேசிய மொழியில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கும் தலைவர்170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதை தெடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று(செப்டம்பர்11) வெளியாகி உள்ளது.