பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

0
126

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு விமான நிலையம் திரும்பிய விஜய் பாதுகாவலர் இல்லாமல் சோதனை வரிசையில் நடந்து சென்றார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கி தமன் இசையமைத்து கடந்த 11ஆம் தேதி வெளியான படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மற்றும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா யோகி பாபு, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், உள்ளிட்டோர்  நடித்திருந்தனர்.

குடும்ப பின்னணியில் உருவான இந்த படம் வெளியாகி ஐந்து நாட்களில் உலகம் எங்கும் 150 கோடி வசூலையும், ஏழு நாட்களில் 210 கோடி வசூலையும் பெற்றதாக பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வாரிசு படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பட குழுவினருக்கு கேக் ஊட்டினார்.

இதில் விஜய் உடன் இயக்குனர் வம்சி படத் தயாரிப்பாளர் தில் ராஜு இசையமைப்பாளர் தமன் மற்றும் பாடல் ஆசிரியரும் படத்தின் வசனகர்த்தாவும் ஆன விவேக் ஷாம் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து வாரிசு கொண்டாட்டம் முடிந்ததும் நடிகர் விஜய் ஐதராபாத் விமான நிலையம் திரும்பினார். அங்கு அவர் பாதுகாவலர் இல்லாமல் முக கவசம் அணிந்து மற்ற பயணிகளை போலவே  பாதுகாப்பு சோதனை வரிசைக்கு நடந்து சென்று நின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.