Nee Varuvai Ena : அந்த ரோல் தான் வேணும்! அடம் பிடித்த விஜய்! நீ வருவாய் என படத்தை மிஸ் பண்ணிய சம்பவம்

0
352
Ajith with Devayani in Nee Varuvai Ena
Ajith with Devayani in Nee Varuvai Ena

Nee Varuvai Ena : நடிகர் பார்த்திபன், அஜித் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான நீ வருவாய் என திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டேயிருக்கும் வகையில் பாடல் வரிகளும், எஸ்.ஏ ராஜ்குமார் இசையும் அமைந்திருக்கும்.

அஜித் (Ajith) :

இந்த படத்தில் ஹீரோவாக பார்த்திபன் நடிக்க அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். ஆனால் நடிகர் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க வேறொரு நடிகர் தேர்வனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் ரோலுக்கு விஜய்:

முதலில் நடிகர் விஜய் தான் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் இணைந்த விஜய் மற்றும் அஜித் இரண்டாவது முறையாக நீ வருவாய் என திரைப்படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பானது அமையாமல் போய் விட்டது.

நீ வருவாய் என திரைப்படத்தின் கதையை எழுதும் போதே இயக்குனர் ராஜகுமாரன் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் மற்றும் அஜித் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்ற வகையிலேயே எழுதியுள்ளார். அந்த வகையில் இந்த கதையை இருவரிடமும் சொல்ல அவர்களுக்கும் கதை பிடித்துள்ளது.

அஜித் கதாபாத்திரத்துக்கு விஜய் விருப்பம் :

இந்நிலையில் அஜித் நடித்த சுப்பிரமணி கதாபாத்திரம் யாருக்கு என நடிகர் விஜய் கேட்டுள்ளார். அதில் அஜித் நடிப்பார் என இயக்குனர் கூறியுள்ளார்.ஆனால் விஜய் தனக்கு அந்த கதாபாத்திரம் வேண்டும் என்றும் இவருடைய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைங்க என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயக்குனரும் கதையை அதற்கேற்ற வகையில் தான் எழுதியிருந்த்தால் விஜய் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமல் போய் விட்டது. அந்த வகையில் தான் இவருக்கு பதிலாக நடிகர் பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actor Vijay missed Nee Varuvai Ena Movie Chance
Actor Vijay missed Nee Varuvai Ena Movie Chance

படம் முழுக்க வரும் பார்த்திபன் கதாபாத்திரத்தை விட்டு ஏன் விஜய் சில காட்சிகளில் மட்டுமே வரும் அஜித் கதாபாத்திரத்தை கேட்டார் என்ற குழப்பம் பலருக்கும் வரலாம். பெரும்பாலான கதாநாயகர்கள் மற்றும் நாயகிகள் அனைவரும் தாங்கள் அதிக நேரம் ஸ்கிரீனில் வர வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.

ஆனால் இப்படத்தில் அஜித் சில காட்சிகளில் வந்தாலும் அதுவே வெயிட்டான ரோலாக இருப்பதால் தான் விஜய் அதில் தான் நடிப்பதாக கேட்டுள்ளார். ஆனால் இயக்குனரின் விருப்பம் அதற்கு அஜித் தான் செட்டாகுவார் என்பதால் விஜய் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போய் உள்ளது.

திட்டமிட்டபடி இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அஜித் மற்றும் விஜய் நடித்த இரண்டாவது படம் என்ற பெயரை பெற்றிருக்கும். இது போலவே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருந்த நேருக்கு நேர் திரைப்படமும் இதற்கு முன் திட்டமிட்டு கைவிட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது.