கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு வாய்ப்பு அவரோ அதில் விமலை நடிக்க சொன்னார். அப்படி வெளியான பசங்க படம் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் விமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விமலுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் சிவகார்த்திகேன், சூரி ஆகியோருடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் நடித்தார்.
அதேபோல், சற்குணம் இயக்கத்தில் மீண்டும் நடித்த வாகை சூடவா படம் விமலுக்கு ஒரு படமாக அமைந்தது. தேசிங்கு ராஜா, சார், கலகலப்பு, எனக்கு எங்கயோ மச்சம் இருக்கு, களவாணி 2, தெய்வ மச்சான் மஞ்சப்பை, துடிக்கும் கரங்கள், மாப்ள சிங்கம், எத்தன், கண்ணன் ராசி என பல படங்களிலும் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக விமல் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம், விமல் நடிப்பில் வெளிவந்த வெப் சீரியஸான விலங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சில நடிகர்கள் புத்திசாலித்தனமாக நடிப்பதோடு மட்டும் நிறுத்திகொள்வர்கள். சிலரோ சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த காசை இழந்து கடனாளி ஆகிவிடுவார்கள். விமலும் அந்த தவறை செய்திருக்கிறார்.
ஊடகம் ஒன்றில் பேசிய விமல் ‘மஞ்சப்பை படத்துக்கு அப்புறம் எனக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. மன்னர் வகையறா படத்தை சொந்தமா தயாரித்து படத்தை வெளியிட்டேன். அந்த படமும் சரியாக போகல. சினிமாவில் சம்பாதித்த பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்’ என சொல்லியிருக்கிறேன்.