மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!! 

0
74
#image_title

மாரடைப்பால் நடிகை திவ்யா ஸ்பந்தனா காலமானார்!!! பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!!!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வெளியான குத்து திரைப்படத்தில் நடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பரவிய வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் 2003ம் ஆண்டு வெளியான அபி என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான குத்து திரைப்படத்தில் நடிகையாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் வாரணம் ஆயிரம், பொல்லாதவன், கிரி, சிங்கம் புலி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மீண்டும் கன்னட மொழியில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்பொழுது கன்னட மொழியில் உத்தரகண்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று பரவிய வதந்தி இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. மேலும் இந்த வதந்தி செய்தி நடிகை திவ்யா ஸ்பந்தனா ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.