அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

0
121
#image_title

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-குற்றவாளிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் போது தமிழை வளர்த்த கருணாநிதிக்கு ஏன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கூடாது.தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே தன் தோளில் சுமந்து காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்ததால் இந்தியாவே வாழும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா உரை.

திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் திமுக கழக துணை பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்கள் கொரோனா காலத்தில் வெளியே வந்து கொரோனா வாட்டில் சென்ற ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் என்றும் ஆபத்துக் காலத்தில் கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் நான் உள்ளேன் என்ற உறுதியை ஏற்படுத்தி தந்த தலைவர் ஸ்டாலின் அவர்கள் என்றும் தமிழர்களின் தலையெழுத்தை மாற்றியது கலைஞரின் பேனா. இந்த பேனா நினைவு சின்னத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று ராசா உரையாற்றினார்.

திராவிட மாடலுக்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், அவர் வைத்திருந்த பேனாவுக்கு 80 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரையில் நினைவுச்சின்னம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்றும், ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் ஒதுக்கிய போது, பல பின் தங்கிய சமுதாயத்திற்கு அங்கீகாரமும் கல்வியும் அதிகாரமும் வழங்கி தமிழை வளர்த்த கலைஞரின் பேனாவுக்கு ஏன் கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் வைக்க கூடாது என்றும் தமிழர்களின் வாழ்க்கையில் இந்த பேனா எவ்வளவு மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று தெரியுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா காட்டமாக உரையாற்றினார்.

பிஜேபி ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்த போதும் பிஜேபியின் மத தினிப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற சித்தாந்த ரீதியில் தான் திமுக கூட்டணி வைத்ததாகவும், பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் இருந்தபோது தமிழகத்தில் மதத்திற்கு அச்சுறுத்தல் இல்லை ஆனால் தற்போது பாஜக இருக்கும்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதத்திற்கு, நீதித்துறைக்கும் காவி புகுந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், பெரியார்,அண்ணா கலைஞர் உள்ளபோது இந்தியாவில் பாஜகவின் அச்சுறுத்தல் இல்லை ஆனால் தற்போது பாஜக மிகப்பெரிய மத அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அதனால் தான் இந்தியாவில் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வருபவர் முத்துவேல் ஸ்டாலின் கருணாநிதி என்றும் ராஜா அவர்கள் உரையாற்றினார்.

மோடியின் மீது குற்றச்சாட்டு உள்ளது அதை நீங்கள் நிரூபியுங்கள் என்று தான் நாங்கள் சொல்லி வருகிறோம் என்றும், அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் என்பதை கேட்பதற்கு உள்ள ஒரே தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் என்றும் இன்றைக்கு காவியை விரட்டி அடித்து விட்டு, வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவில் ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துவதற்காக உள்ள ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்றும், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில் தமிழகம் மட்டும் பாஜகவுக்கு எதிராக உள்ளது என்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோளில் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உள்ளது என்றும் இந்த மனிதன் வாழ்ந்தால் தான் தமிழக மட்டுமல்ல இந்தியாவே உள்ளது குறிப்பாக இந்தியாவின் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டிய பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது ஸ்டாலின் வாழ்ந்தால் தான் இந்தியாவை வாழும் என்றும் உரையாற்றினார்.

author avatar
Savitha