ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

Photo of author

By Rupa

ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

Rupa

Adhav Arjuna criticized Edappadi, Edappadi gave an interview on whether Vijay called him.

ADMK TVK: விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்றமடைந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் புஸ்ஸி ஆனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜக வே அதிமுகவை விரட்டிவிடும். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்காங்க என ஒருமையில் பேசியிருந்தார்.

இப்படி அதிமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்தது குறித்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில் தான் பேசியது தவறுதான் என  ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இப்படி இருக்கையில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, விஜய் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்து இது ரீதியாக பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல ஆதாவ் அர்ஜுனா மன்னிப்பு கூறியதற்கும் அதுதான் காரணம் என்று தெரிவித்தனர். எடப்பாட-யிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் நேரடியாக கேட்கையில், என்னிடம் நடிகர் விஜய் ஏதும் பேசவில்லை ஆதவ் அர்ஜுனா தங்களை விமர்சனம் செய்ததற்கு அவரே பதில் கூறிவிட்டார் என தெரிவித்தார்.

மேற்கொண்டு திமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தங்களை “துரோக அதிமுக” என்று தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார். நாங்கள் துரோகம் செய்தவர்கள் இல்லை திமுக தான் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. அம்மாவின் மறைவுக்குப் பின்னும் அதற்கு முன்பு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சட்ட ஒழுங்கும்  சீராக இருந்தது. தற்போது தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை கண்டு வருகிறோம். இது அனைத்தும் இந்த மாடல் ஆட்சியில் தான் நடக்கிறது அப்படி பார்க்கையில் இதுதான் துரோக ஆட்சி என்று பேசினார்.