தனுஷ் குறித்து என் உள்ளுணர்வு சொன்னது இதுதான்: பிரபல நடிகை பேட்டி

0
314

தனுஷ் இயக்கிய பா.பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் இரண்டாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரியவில்லை இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அதிதி ராவ் கூறியதாவது:

‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார். இவ்வாறு அதிதிராவ் தெரிவித்தார்.

Previous articleதமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?
Next articleடிரம்ப் பதவி தப்பியது: தேர்தலில் நிற்கவும் தடையில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here