சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம்!!! இன்று விண்ணில் பாய்கின்றது!!!

0
40

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம்!!! இன்று விண்ணில் பாய்கின்றது!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்படும் என்று கூறியது போல இன்று(செப்டம்பர்2) ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்புகின்றது.

நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய பிறகு இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை வடிவமைத்தது. இந்த ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக விண்ணில் அனுப்பப்படவுள்ளது.

இந்த ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தில் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆதித்யா எல்1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியான் பாயின்ட் ஒன்’ என்ற இடத்தில் சூரியனை நோக்கி நிலை நிறுத்தப்படுகின்றது. ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை நோக்கி விண்ணில் அனுப்பப்பட்ட பிறகு ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள கருவிகள் காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியில் உள்ள துகள்கள், விண்வெளியில் உள்ள காலநிலை, சூரியனின் வெப்பம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி57 ராக்கெட் மூலமாக இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் நேற்று(செப்டம்பர்1) தொடங்கிய நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சூரியனை நோக்கி அனுப்ப இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.