ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Photo of author

By Pavithra

ஈரோட்டில் 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Pavithra

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் மதுரை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் சென்னையை விட ஈரோட்டில் 70 பேருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு தமிழகத்தில் முதலிடம் வகித்தது.

பல கடுமையான விதிகளை பின்பற்றி கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 70 கொரோனா தொற்று நோயாளிகளும் முழுவதுமாக குணமடைந்து பச்சை மண்டலமாக அதாவது பூஜ்ஜிய கொரோனா தொற்று மாவட்டமாக ஈரோடு மாறியது.

ஆனால் தற்போது 37 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கவுண்டன் பாடியை சேர்ந்த 52 வயது உடைய ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.