பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

Photo of author

By CineDesk

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

CineDesk

Updated on:

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இன்னும் ஒரு சில மணி நேரமே இருக்கும் நிலையில், திடீரென அஜித் பவார் தான் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாஜக அரசுக்கு திடீரென ஆதரவு கொடுத்து விட்டு அதன் பின்னர் அதே வேகத்தில் திடீரென ஆதரவை வாபஸ் பெற்ற அஜீத் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார்

இந்த நிலையில் இன்று மும்பையில் பல சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அடுத்த முதல்வர் அஜித் பவார் தான் என்றும் அவரது பின்னால் தான் மராட்டிய மாநிலம் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு பின்னணியில் அஜித் பவார் தான் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சிவசேனா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூட்டணி ஆட்சியை ஐந்து வருடங்களுக்கு பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என சிவசேனா நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பதவி ஏற்பதற்கு முன்னரே கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு போஸ்டர் ஒட்டுவது கூட்டணி தர்மத்திற்கு அழகா? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது

ஆனால் சில தொண்டர்கள் ஆர்வக்கோளாறில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி இருக்கலாம் என்றும் இந்த போஸ்டருக்கு அஜித் பவாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அஜித் பவார் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.