நமது திருச்சி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் அதாவது NIT-யில் காலியாக இருக்கின்ற Junior Research Fellow பணிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT)
பணி: Junior Research Fellow
காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பணியிடம்: திருச்சி
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:12-05-2025
மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பிஇ,பி.டெக்,எம்.டெக் போன்ற படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.nitt.edu என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 12 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.