நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

0
30

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்…

 

சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி யோளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. யோளியை ஏற்றிக் கொண்டு சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே வந்து கொண்டிருந்தது.

 

அப்பொழுது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன் மோதி விபத்துக்கு உள்ளானது. லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த நோயாளி உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸில் சிக்கி இருந்த நோயாளி உள்பட 5 பேரை மீட்டு மற்றொரு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன் பின்னர் இந்த விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அப்பொழுது ஆம்புலன்ஸ் திடீரென்று தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் தீ பற்றி எரிவதற்கு முன்னரே ஆம்புலன்ஸில் சிக்கி இருந்த அனைவரையும் மீட்டதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

 

இதையடுத்து ஆம்புலன்ஸில் பற்றிய தீயை போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர். அதன் பிறகு ஆம்புலன்ஸை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.