ADMK BJP: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியே களம் காண நேரிட்டது. இதில் ஒரு சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. மேற்கொண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக மீண்டும் இவர்களது கூட்டணியானது ஒன்றிணைந்துள்ளது. அதிலும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.
விஜய் புதிய கட்சி தொடங்கி, எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு கட்டாயம் ஆட்சியில் பங்கு எனக் கூறினார். இவர்களுடன் ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி சரி வராததால் தான் பாஜகவுடன் கைகோர்க்க நேரிட்டது. மற்றொருபுறம் விஜய்யின் இந்த அறிவிப்பை அடுத்து இதர கூட்டணி கட்சியினர் அவர்களது தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதன் தாக்கமானது தற்போது வரை இருந்து வருகிறது.
அந்த வகையில் பாஜகவும் இலை மீதுதான் தாமரை மலரும், கட்டாயம் வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் நடக்கும் எனக் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்கொண்டு தமிழகம் வந்த அமித்ஷாவும் இதையே தான் கூறியுள்ளார். இதனால் எடப்பாடி மிகவும் அதிருப்தியில் உள்ளாராம். இது பாஜக தானே எடுத்த விருப்பம் என்னிடம் இது ரீதியாக இதுவும் ஆலோசிக்கவில்லை என நிர்வாகிகளிடம் கூறியுள்ளாராம். இதனால் சட்டமன்ற தேர்தலுக்குள் இவர்களது கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.