நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!!

0
98
#image_title

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!!

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவர் கடைசி வரை சந்திக்க முடியாமல் 108 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சுன்னாம்புத்திரா பகுதியில் 108 வயது உடைய மாதவியம்மாள் மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நடிகர் மோகன்லால் அவர்களின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் அவர்களின் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பு ஆனால் ஒரு நிமிடம் கூட விடாமல் திரைப்படங்களை பார்த்துவிடுவார். அந்த அளவிற்கு நடிகர் மோகன்லால் அவர்களின் தீவிர ரசிகையாக மாதவியம்மாள் மூதாட்டி இருந்து வந்தார்.

மேலும் நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது மாதவியம்மாள் மூதாட்டியின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு மூதாட்டி மாதவியம்மாள் அவர்கள் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்கு ஓணம் பண்டிகையின் பொழுது எம்.எல்.ஏ ஷாபி பரம்பி அவர்கள் கலந்து கொண்டார்.

இதையடுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ ஷாபி பரம்பி அவர்களிடம் மூதாட்டி மாதவியம்மாள் அவர்கள் நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சமூக வலைதளத்தில் அதை பதிவு செய்ய மாதவியம்மாள் மூதாட்டி அவர்கள் பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து சமூகவலைதளங்களில் பிரபலம் அடைந்த மாதவியம்மாள் மூதாட்டியை நடிகர் மோகன்லால் அவர்கள் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திற்கு படப்பிடிப்புக்கு நடிகர் மோகன்லால் அவர்கள் வந்திருந்த பொழுது மூதாட்டி மாதவியம்மாள் அவர்களை நடிகர் மோகன்லால் அவர்கள் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிக வேலை இருந்ததால் நடிகர் மோகன்லால் அவர்கள் மாதவியம்மாள் மூதாட்டியை சந்திக்காமல் சென்றார். மேலும் உடல் நலம் காரணமாக மாதவியம்மாள மூதாட்டி அவர்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் 108 வயதில் மாதவியம்மாள் மூதாட்டி அவர்கள் உயிரிழந்துள்ளார். நடிகர் மோகன்லால் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற மாதவியம்மாள் அவர்களின் ஆசை கனவாக கரைந்து போனது.

மாதவியம்மாள் மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் இருந்து தங்கி இருங்கும் ரசியா பானு அவர்கள் “முதியோர் இல்லத்தில் டிவியில் மோகன்லால் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நிமிடம் கூட தவறாமல் நடிகர் மோகன்லால் படத்தை மாதவியம்மாள் மூதாட்டி அவர்கள் பார்ப்பார். யாராவது சேனலை மாற்றினால் மாதவியம்மாள் மூதாட்டி அவர்கள் கபம் அடைந்து விடுவார்” என்று கூறியுள்ளார்.