குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

0
88
An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..
An Important Notice for Group 1 Candidates!..Group 1 Exam Deadline Ends Today!..

குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..

குரூப் 1 தேர்வு  அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், துணை காவலர் உதவி ஆணையர், துணை பதிவாளர், உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

 இந்த குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இப்பணி இடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.அதன்படி இன்று 22/08/2022 கடைசி நாள் என்றும் மேலும் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும்,இந்த தகவலை கருத்தில் கொண்டு விரைவில் செயல்படுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K