அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்! புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்!!

0
73
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்… புறக்கணிப்பு செய்த தேமுதிக பொருளாளர்…
பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பயணத்தை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நடைபயணம் இன்று(ஜூலை28)  மாலை தொடங்கவுள்ள நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடங்கிவைக்கவுள்ளார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் அண்ணாமலை அவர்கள் அழைப்பு விடுத்தார். இதையடுத்து தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் “பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று என் மண் என் மக்கள் பயணத்தை இராமேஷ்வரத்தில் தொடங்கவுள்ளார். அண்ணாமலை அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். மாநிலத் துணைசெயலாளர் கரு நாகராஜன்.அவர்கள் நேரடியாக வந்து என் மண் என் மக்கள் பயணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
எனது சார்பாகவும் மரியாதை நிமித்தமாகவும் தேமுதிக கட்சியின் சார்பிலும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா அவர்களும் மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்களும் இந்த நடைபயண நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெறுவதற்கு என்னுடயை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு அண்ணாமலை அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதை புறக்கணித்துவிட்ட நிலையில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.