மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி!!

0
44

 

மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி… திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சி…

 

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லையை அடுத்த கங்கொண்டான் பகுதியில் உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் 21 வயதான அரவிந்த் அவர்கள் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

 

இதையடுத்து இன்று(ஜூலை28) அரவிந்த் அவர்கள் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். கங்கொண்டான்.பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது தனியார்.மாவு மில் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை அருகில் உள்ள ஆலமரத்தில் மோதியதில் அரவிந்த் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரவிந்த் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை அறிந்த பொதுமக்கள் கங்கை கொண்டான் பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்த கங்கை கொண்டான் பகுதியின் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு விபத்தில் பலியான அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பா வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.