நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

0
95

நான் கூட புர்கா அணிந்துகொள்ள தயார்:புர்கா சர்ச்சையில் வாய்திறந்த ரஹ்மான் !

தன் மகள் அணிந்திருக்கும் புர்கா தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைக்கு முதல் முறையாக மௌனம் கலைத்து பதில் சொல்லியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான ஒரு சர்ச்சையும் கிளம்பியது.

கதீஜா புர்கா ஆடை அணிந்து இருந்ததால் ஏ ஆர் ரஹ்மானை பிற்போக்குவாதியாக சித்தரித்து நிறைய விமர்சனங்கள் எழவே, அதற்குப் பதிலளித்த கதீஜா ரஹ்மான் ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் தந்தை எப்போதும் உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார்’ எனக் கூறினார்.

இந்த புர்ஹா விவகாரம் அத்தோடு முடிய இப்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் புதிய வடிவில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ‘ எனக்கு ஏ ஆர் ரஹ்மானை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போதுதான் ஒருவிதமான புழுக்கத்துக்கு ஆளாகிறேன்.’ எனத் தெரிவிக்க மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் இப்போது மீண்டும் கோபமாக கதீஜா ரஹ்மான் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஒருவருடத்திற்குள்  மீண்டும் இந்த விஷ்யம் டாப்பிக்காக ஆகியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். கூகுளில் சற்று பெண்ணியம் என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ தடாலடியாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக் குறித்து இதுவரைப் பேசாமல் இருந்த ரஹ்மான் இப்போது முதல்முறையாக பேசியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் வழியாகவே நமது பிள்ளைகளையும் அழைத்துவரவேண்டியுள்ளது.. அப்போது தான்  நம்முடைய பிரச்சினை எதுவென்று அவர்களுக்குத் தெரியும். நல்லது கெட்டதைத் தெரிந்து கொண்ட பின் எது சரியென்ற முடிவை அவர்கள் எடுப்பார்கள். கதிஜா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததைப் பார்த்தேன். அதற்கு முன்னர் நாணும் அவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஏனன்றா முக்காடுக்குப் பின்னால் இருப்பவர் கதிஜா. அது அவருடைய முடிவாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.  ஒரு ஆண் புர்கா அணியக்கூடாது. இல்லையென்றால் நான் தாராளமாக ஒரு புர்காவை அணிந்துகொள்வேன். அதன் மூலம் கடைக்குச் செல்வதற்கும், வாழ்வின் பல விஷயங்களை உணர்வதற்கும் அது உதவியாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K