21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்!

0
81
Are you a 21 year old? Apply today! The government's new subsidy program!
Are you a 21 year old? Apply today! The government's new subsidy program!

21 வயது நிரம்பியவரா நீங்கள்? இன்றே விண்ணப்பியுங்கள்! அரசின் புதிய மானிய திட்டம்!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை  இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல புதிய அம்சங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். இந்த வருடம் ரூ 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதில் மத்திய அரசு 1729 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கடன் தொகையாக 500 கோடி தரலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்தோடு வெளியில் கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ரூ 1889 கோடி வரை கடன் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.அந்தவகையில் புதிய திட்டங்களையும் அமல்படுத்தி நிதி ஒதுக்கப்படும் என கூறினார்.

அந்தவகையில், சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன்  துறைமுகத்திற்கு பயணிகள் சரக்கு கப்பல் சேவை அமல்படுத்தப்படும். இலவச பாட புத்தகங்கள்,சீருடை ,மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இதுபோல பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இருப்பதாக கூறினார். அத்தோடு 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தார். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இல்லத்தரசிகளுக்கு இந்த ரூ.1000 கட்டாயம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.