தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

0
204
#image_title

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது,

இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

11, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கு வருகின்ற 28ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட இருக்கிறது.

அதன்படி 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் பிப்ரவரி 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எனவே தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தேவையான விவரங்களை அதே இணையதள பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.