10 மற்றும் 12ம் வகுப்பு படித்துவிட்டு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?? இதோ உங்களுக்காக தமிழ்நாடு நலத்துறையில் வேலைவாய்ப்பு!!

0
34

10 மற்றும் 12ம் வகுப்பு படித்துவிட்டு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?? இதோ உங்களுக்காக தமிழ்நாடு நலத்துறையில் வேலைவாய்ப்பு!!

தமிழக அரசின் சமூக நலத்துறையில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், எம்டிஎஸ், ஆபீஸ் அசிஸ்டென்ட் மற்றும் பாலின ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 274 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணிஅக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், எம்டிஎஸ், ஆபீஸ் அசிஸ்டென்ட் மற்றும் பாலின ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் 274 காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.52,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Diploma,முதுகலை பட்டம், பட்டதாரி படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 26.7.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.tnsocialwelfare.org என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

author avatar
Parthipan K