உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

0
125

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது.

நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள்

கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. மேலும் வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது

கோமதி சக்கரம் வழிபடும் முறை :கோமதி சக்கரத்தை பசும்பாலில் அபிஷேகம் செய்த பிறகு தூய்மையான நீரை கொண்டு கழுவ வேண்டும்.அதன் பிறகு அதனை நன்றாக துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிவப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை வைக்க வேண்டும். அதனையடுத்து அதற்கு பூ வைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலம்புரி சங்கு வழிபடும் முறை :வலம்புரி சங்கை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு சந்தனம், குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிதளவு வைத்து நீர் ஊற்றி அதன் பின்பு மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைத்து கொள்ளலாம்.

கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு என்பது வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் தன்மை கொண்டது.

கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு ஆகியவை ஓர் இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும். தீய சக்திகள் மற்றும் எந்தவித தடைகள் மற்றும் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பது முன்னோர்களின் வாக்கு.

 

author avatar
Parthipan K