உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!

Photo of author

By Divya

தற்பொழுது வறண்ட பனி காலம் என்பதால் சருமம் மற்றும் உதடு வறட்சியை பலரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் போதிய நீர்ச்சத்து இல்லையென்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.இதில் உதடு வறட்சியால் ஏற்படும் எரிச்சலை பலரும் அனுபவிக்கின்றனர்.உதடுகளில் ஈரம் இல்லாமல் வறண்டு போனால் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியும்.இந்த உதடு வறட்சி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

உதடு வெடிப்பிற்கான காரணம்:

*வறண்ட பனி
*உதடு பராமரிப்பின்மை
*உடலில் நீர்வறட்சி

வெடித்த உதடுகள் பூ போன்று மென்மையாக வேண்டுமென்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)பெட்ரோலியம் ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து முதலில் பெட்ரோலியம் ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து க்ரீம் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**இந்த க்ரீமை உதடுகளில் அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி உதடுகள் மிருதுவாகிவிடும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பன்னீர் ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி
2)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பேஸ்டை உதடுகளில் அப்ளை செய்து வந்தால் உதடு வெடிப்பு முற்றிலும் சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**பிரஸ் கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த கற்றாழை கலவையை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை உதடுகளில் அப்ளை செய்தால் வறட்சி நீங்கிவிடும்.