மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

0
36
Attention people only 2 more days!! New notification released by income tax department!!
Attention people only 2 more days!! New notification released by income tax department!!

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  31  ஆம் தேதி கடைசி நாளாக ஐ.டி.ஆர் அறித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த ஆண்டுகள்  போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளது.    மேலும் அனைவரும் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதனையடுத்து புதிய அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்தாமல் இருந்தால் அபராத தொகையுடன் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதன் பிறகு செலுத்தினால் 5000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வருமானம் வரி செலுத்தபவர்களுக்கு  ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் வருவம் 5 லட்சம் ரூபாய்க்கு தாமத கட்டணம் 1000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வருமான வரியில் எதாவது நிலவைத் தொகை வந்தால் கூடுதல் வருமான வரி வசூல் செய்யப்படும் என்று வருமான வரித்துறைனர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் வருமான வரி செலுத்தாமல் இருந்தால் அந்த நபர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதனை தொடர்ந்தும் நோட்டீஸ் வந்தும் வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எட்க்கபடும் என்றும் தெரிவித்துள்ளர்கள். மேலும் அந்த நபருக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

author avatar
Jeevitha