தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது.
கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி வருகிறது.
குரூப் -1
துணை கலக்டெர்,DSP,பதிவுத் துறை,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் -2 மற்றும் குரூப் -2A
நகராட்சி ஆணையர்,துணை பதிவாளர்,உதவி பிரிவு அதிகாரி,துணை வணிக வரி அதிகாரி,நன்னடத்தை அலுவலர்,திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் -3
கிராம நிர்வாக அலுவலர்,தட்டச்சர்,இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
குரூப் -4:
இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
TNPSC தேர்வு:
வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.அடுத்து செப்டம்பர் 28 குரூப் 2 மற்றும் 2A நடைபெற உள்ளது.
இந்த இரு தேர்வுகளும் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.இந்த தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும்.தமிழ் மொழி கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கும்,பொது ஆய்வுகள் மற்றும் திறன் மற்றும் மனத்திறன் தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்ய வேண்டும்.6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்த பிறகு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிக்க வேண்டும்.பிறகு தேர்வு முந்தைய 6 மாதங்களுக்கான நடப்பு நிகழ்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். தினமும் தேர்வு பாடத்தை படித்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.