இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்!

இந்தியாவின் தலைநகர் ஆகின்றதா சென்னை? பரபரப்பு தகவல்! டெல்லியில் காற்றின் தரம் மிக குறைந்து கொண்டு செல்வதால் டெல்லியை விட்டு வேறு நகரத்திற்கு செல்ல சுமார் 40% சதவிகித பொதுமக்கள் விரும்புவதாக சமீபத்தில் ஒரு சர்வே தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகருக்கே இந்த கதியா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது இந்த நிலையில் டெல்லி நகரம் உண்மையில் தலைநகரம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானதா? என்று பல கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து இணையதளங்களில் எடுக்கப்பட்ட ஒரு … Read more

உயிருடன் மீட்கப்பட்ட ஹரியானா சிறுமி: அதன் பின்னர் நடந்த சோகம்!

உயிருடன் மீட்கப்பட்ட ஹரியானா சிறுமி: அதன் பின்னர் நடந்த சோகம்! நேற்று மாலை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்பூரா என்ற பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அவரை மீட்க உடனடியாக மீட்புப்படைகள் களமிறங்கின. ஆழ்துளை கிணற்றில் இருந்த சிறுமி 50 அடி ஆழத்தில் இருந்ததால் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டிய மீட்புப்படையினர் இன்று காலை உயிருடன் மீட்டனர். ஆனால் அந்த சிறுமி … Read more

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்புக்குழுவினர் ஐந்து நாட்களாக சுஜித்தை மீட்க போராடி இறுதியில் பிணமாகவே மீட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு பின் இனியொரு குழந்தை இதேபோல் உயிரிழந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது இதனையடுத்து விழிப்புணர்ச்சி ஏற்பட்ட பொதுமக்கள் தாங்களாகவே மூடப்படாமல் இருந்த … Read more

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து! திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கூட யாரும் இந்த அளவு ஆய்வு செய்திருக்க மாட்டார்கள். அதைவிடுத்து வள்ளுவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர்? அவர் நாத்திகரா? ஆத்திகரா? வள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கின்றோம் என திராவிட அபிமானிகள் ஆழ்ந்த ஆய்வில் உள்ளனர். இந்த ஆய்வை அவர் எழுதிய திருக்குறளில் காண்பித்திருந்தால் இந்நேரம் நாடு சுபிட்சன் அடைந்திருக்கும் இந்த நிலையில் வள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்று … Read more

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன்தினம் கோல்டன் ஐகான் விருது வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. பிரபல அரசியல் தலைவர்களும் இந்தியாவில் உள்ள திரையுலக நட்சத்திரங்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் அழைத்து கமலஹாசன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த … Read more

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா? இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி … Read more

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் … Read more

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் … Read more

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: தற்போது என்னை … Read more

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால்பதித்து வணிகம் செய்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சினிமா டிக்கெட் விற்பனையும் செய்யவுள்ளது அமேசான் நிறுவனம் ’புக் மை க்ஷோ’ ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது இதற்காக அமேசான் நிறுவனத்தின் செயலியில் சினிமா டிக்கெட்டுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more