களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!

களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!

மூலிகை மைசூர்பாக் உண்பதால் கொரோனா குணமாகும் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் 19 மூலிகைகள் கொண்டு மூலிகை மைசூர்பாக் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதனை உண்பதால் கொரோனா குணமாகும் என்றும் கடந்த 3 மாதங்களாக விற்பனை களைகட்டியுள்ளது.   இந்த மூலிகை இனிப்பு தகவலை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க … Read more

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more

“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” தமிழகம் முழுவதும் தடை; முற்றுப்புள்ளி வைத்த சாத்தான்குளம் சம்பவம்!

"பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்" தமிழகம் முழுவதும் தடை; முற்றுப்புள்ளி வைத்த சாத்தான்குளம் சம்பவம்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்ல நட்பை ஏற்படுத்தும் வகையில் 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள காவலர்கள் வாகன தணிக்கை, குற்றம் நடைபெறும் இடம் குறித்த தகவல், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது கடும் எதிர்ப்பு வலுத்தன. மேலும் இந்த வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் … Read more

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார்.   தற்போது மின்சார சட்டதிருத்த மசோதாவை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மசோதா குறித்து முன்பே அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அப்போதே விவசாயம் மற்றும் ஏழை மக்களுக்கான மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பினார்.   இந்த நிலையில் … Read more

தனது திருமணத்தை அவதூறாக பேசியதால் வழக்கில் மாட்டிவிட்ட வனிதா..!!

தனது திருமணத்தை அவதூறாக பேசியதால் வழக்கில் மாட்டிவிட்ட வனிதா..!!

நடிகை வனிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி பீட்டர்பால் என்பவரை கிறித்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது மதுப்பாட்டிலை குலுக்கியதும், லிப்லாக் காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த திருமணத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.   இதையடுத்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசெபத் ஹெலன் என்பவர் தனது கணவரை மீட்டு தருமாறு வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன் … Read more

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; நொடிப் பொழுதில் கட்டடம் தரைமட்டம்!

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; நொடிப் பொழுதில் கட்டடம் தரைமட்டம்!

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களம் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமத்தை பெற்ற இந்த ஆலையில் 78 அறைகளுடன் இயங்கி வருகிறது. அன்றாட பணியைப் போல நேற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.   குறிப்பிட்ட ஒரு அறையில் ராமகுருநாதன் என்ற பணியாளர் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டு அந்த அறை தரைமட்டமானது. இதில் அவர் பலத்த படுகாயமடைந்தார். … Read more

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊரடங்கினால் 18 – 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மின் கட்டணமும் கூடுதலாக உள்ளது என்று, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்நிலையில் நடிகர் ஒருவர் … Read more

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்ல விமானம் மூலம் செல்ல தயாரான நிலையில் காவல்துறையிடம் அவரது மகள் கடந்த 29 ஆம் தேதி மாம்பலம் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, தனது அம்மா வசந்தா தி.நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கால் அவரை அழைத்து வரவில்லை என்றும், அவருக்கான இ-பாஸ் மற்றும் விமான பயணசீட்டும் எடுத்துள்ளதால் … Read more

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்க்ருஹா இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.   மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த இல்லம் தாக்குதலுக்கு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் அம்பேத்கர் பயன்படுத்திய நூல்கள், பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   … Read more