5.07 கோடி பேருக்கு..! பாதிப்பு நிலவரம்!

5.07 கோடி பேருக்கு..! பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 50,731,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 35,793,227 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,675,944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 92,624 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,261,980 … Read more

இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக Speed … Read more

85 லட்சத்தை கடந்த பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!

85 லட்சத்தை கடந்த பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 45,673 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,07,754 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 559 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தீபாவளியன்று இதை மட்டும் செய்யாதீங்க..! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

தீபாவளியன்று இதை மட்டும் செய்யாதீங்க..! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அது எழுப்பும் ஒலியினால் சிறுவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு..!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு..!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,341 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,41,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,324 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,352 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!

மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் … Read more

4.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

4.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 49,667,748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 35,254,736 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,164,232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90,899 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,248,780 … Read more

ஆதார் எண்ணை இவர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்..! அதிரடியாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஆதார் எண்ணை இவர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்..! அதிரடியாக வெளியாகியுள்ள அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு எண்ணை வைத்து இருக்கும் தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி செயலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே தேர்வாணையத்தின் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நாளிட்ட செய்தி வெளியீட்டு அறிவிப்புப்படி ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனது நிரந்தரப் பதிவுடன் (ONE … Read more

பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!

பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார வகைகளை மக்கள் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இதனால் இனிப்பு, கார வகைகளின் விற்பனை மற்றும் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கும் இனிப்பு மற்றும் கார வகைகளில் அதிக அளவு செயற்கை பொருட்கள் பயன்படுத்துவதோடு, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் … Read more

கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் … Read more