சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர் அடித்ததால் ஓடிய போது கீழே விழுந்து வடமாநில இளைஞருக்கு தலையில் அடி!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடிவந்த போது கால் தடுக்கி கீழே விழுந்ததில் வடமாநில இளைஞர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக வந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் ரயில் நிலையம் வந்ததாக தெரிகிறது. அப்போது, அந்த இளைஞரை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் … Read more

தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்-திரு எஸ்.மணிகண்டன்!!

சென்னையில் திரு எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் – அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார். திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் … Read more

அரசு குழந்தைகள் காப்பகங்களில் அதிகாரிகளின் அலட்சியம்!! 7 நாட்களுக்குப் பிறகு மாயமான சிறுமிளை தனிப்பட்ட மீட்பு!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த மாயமான பெண் குழந்தைகள் 7 நாட்களுக்கு பிறகு தனிப்படை மீட்பு. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏழு நாட்களுக்கு பிறகு நாகப்பட்டினம் அருகே மீட்கப்பட்டனர். சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட … Read more

கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கள்ளக்குறிச்சி அருகே சாலை‌ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!! லாரி மற்றும் கரும்பு டிராக்டர் போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்லும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்‌ பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி ‌மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம்‌ கிராமத்தைச் சேர்ந்த மணி கள்ளக்குறிச்சியில் ஜிகர்தண்டா கடை‌‌ வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை திறப்பதறக்காக மணி தனது வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று‌ கொண்டிருந்தார். அப்போது அரியபெருமானூர் என்ற இடத்தில் லாரி‌ … Read more

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, … Read more

சிங்கம்புணரி அருகே மழை வேண்டி விவசாயம் செழிக்க நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா!!

சிங்கம்புணரி அருகே மழை வேண்டி விவசாயம் செழிக்க நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா!! குடும்பம் குடும்பமாக கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டு கிலோ கணக்கில் மீன்களை அள்ளிய கிராம மக்கள். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஐநூத்திப்பட்டி கிராமத்தில் ஐநூத்திகண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும்,இந்த கண்மாயில் இருந்து 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெறுகிறது. நெல் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலம் துவங்கி வெயில் … Read more

இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!

இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!! ஆணாதிக்கம் அதிகம் உள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராதிகா ஆப்தே அதன் பிறகு தமிழில் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, சித்திரம் பேசுதடி-2 போன்ற படங்களிலும் நடித்தார். கபாலி என்ற படத்தின் … Read more

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!!

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!! கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து திரு.அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்த போதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரமானது அப்போது தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் … Read more

பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!

பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!! சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் என்ற இளம் வீரர் போட்டியில் கலந்து கொண்டு ஆரம்ப முதலிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தகுதிச்சுற்று ஆட்டத்திலும் சரி காலிறுதி போட்டிலும் சரி அதிரடியாக … Read more

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா உற்சவத்தின் நிறைவு நாள்!! ஊஞ்சல் சேவை உற்சவத்தில் காட்சி அளித்த ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி அம்மன்!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா உற்சவத்தின் நிறைவு நாள்!! ஊஞ்சல் சேவை உற்சவத்தில் காட்சி அளித்த ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி அம்மன்!! நிறைவு நாள் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். பஞ்ச பூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும், மூவாயிரம் ஆண்டுகள் பழமையான, உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கடந்த மார்ச் மாதம் 26 … Read more