பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

Photo of author

By Parthipan K

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

Parthipan K

Updated on:

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி மற்றும் தமிழில் மொழிகளில் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தப்படுகிறது, இதில் ஆபாசம் கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகள் தூண்டுகோலாய் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது, நிகழ்ச்சியை தடை வேண்டும் என்று கூறி வருகின்றனர், இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்கள் தமிழ்நாட்டிலும் இந் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.