பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு பிரிவு) போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது மாநில துணைத்தலைவர் (இளைஞரணி) பொறுப்பில் இருந்து கட்சித் தளவமைப்பை வலுப்படுத்தி வருகிறார் என தகவல்.
பழனி தொகுதியில் 2000க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்களை கட்சியில் இணைத்தது, 45,000க்கும் மேற்பட்ட மக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது போன்ற கள பணிகள் அவருக்கு தனி அடையாளமாக அமைந்துள்ளன. சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, 100க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியது, மாதந்தோறும் அன்னதானம் நடத்தியது, “Drug-Free Palani” போன்ற விழிப்புணர்வு இயக்கங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் Rope Car சேவை சீரமைப்பு, Underground Sewerage திட்டம் நிறைவு, பல்துறை சிறப்பு மருத்துவமனை தேவை, Mega Food Park அமைப்பு, விவசாய மற்றும் குடிநீர் பிரச்சனைகள் போன்ற முக்கிய உள்ளூர் கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் என கூறப்படுகிறது.
ஆன்மிக மையமாக திகழும் பழனியில் கோவில் சார்ந்த சேவைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் மூலம் பரவலான ஆதரவை பெற்றுள்ளதால், பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.
இளைஞர் முகம், களத்தில் நேரடி செயற்பாடு, அமைப்பு வலிமை ஆகிய மூன்றையும் இணைக்கும் வேட்பாளராக கமலேஷ் கண்ணன் உருவெடுத்து வருகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.