கருப்பு தோலை வெள்ளையாக்கும் கோதுமை க்ரீம்!! இது மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்!!

Photo of author

By Divya

கருப்பு தோலை வெள்ளையாக்கும் கோதுமை க்ரீம்!! இது மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்!!

Divya

அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.இதற்காக கண்ட பொருட்களை பயன்படுத்தி அழகை பாழாக்கி கொள்ள வேண்டாம்.நமது வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து சரும நிறத்தை மாற்றும் சூப்பர் க்ரீம் தயாரித்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி
2)நெய் – அரை தேக்கரண்டி
3)பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான நெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலக்க வேண்டும்.

**பிறகு இந்த பேஸ்டை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் சரும அழுக்குகள்,இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 50 கிராம்
2)கஸ்தூரி மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி
3)பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் 50 கிராம் பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் எடுத்து பாதாம் பருப்பு பொடியில் போட்டு நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பருப்பு பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் காய வைத்து சுத்தம் செய்து வந்தால் சருமம் பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி
2)தேன் – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த கோதுமை மாவு மூன்று தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கலக்க வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து பேஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**இந்த பேஸ்டை சருமத்தில் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு உலர விட வேண்டும்.

**பின்னர் தண்ணீர் கொண்டு சருமத்தை க்ளீன் செய்தால் சரும பளபளப்பு அதிகரிக்கும்.