சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 33

திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு வைத்த அதிமுக.. பிளவுறும் ஆளுங்கட்சி!!

0

ADMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் மும்முரமாக உள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்N பயணத்ததையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக உள்ளன.

இது மட்டுமல்லாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வேறு கட்சியில் இணைவது வழக்கம். இதற்காக, பல்வேறு இடங்களில் மாற்று அணியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் விழாவும் நடைபெறும். அந்த வகையில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகு ராஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, வைத்தியலிங்கத்தையும் திமுகவில் சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.

இவர்கள் திமுகவில் இணைந்தது ஸ்டாலினுக்கு மேலும் பலத்தை கூட்டினாலும் இது திமுக அமைச்சர்களுக்கு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. ஏனென்றால், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் அனைவரும் முக்கிய அமைச்சர்கள் என்பதால், இவர்களுக்கு 2026 தேர்தலில் சீட் வழங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போதுள்ள அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். இவர்களின் வருகை திமுகவில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் திமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போதுள்ள அமைச்சர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை இது தான்.. வெளிவந்த கருத்து கணிப்பு!!

0

ADMK:மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் முன்னாள் தலைவர்கள் இல்லாமல் வலுவிழந்து காணப்படுகிறது. அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய போது ஏற்படாத பிரிவினைகள், இபிஎஸ் தலைமையில் அரங்கேறி வருகிறது. தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களை கூட ஜெயலலிதா அரவணைத்து சென்றார். இபிஎஸ் அதற்கு எதிர்மாறான வேலைபாடுகளை செய்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களாகவும், ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர்களையும் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்று.

இதனால் அவர்கள் தொண்டர்களின் வாக்கு அதிமுகவிற்கு சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. அதிலும் முக்கியமாக, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஈரோட்டில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துமென்று மதிப்பிடப்படுகிறது. முக்கிய தலைவர்களை நீக்கிவிட்டாலும் விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டால் பிரிந்து சென்றவர்களின் வாக்கு வங்கியை விஜய் மூலம் சரிகட்டி விடலாமென்று இபிஎஸ் நினைத்த சமயத்தில் விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தற்போது அதிமுக, பாஜக உடன் மட்டுமே கூட்டணி அமைத்திற்கும் நிலையில், இந்த கூட்டணி தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லையென்று, கருத்து கணிப்பு கூறுகிறது. இந்த கூட்டணியால், ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆக முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தவெக தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால், அதிமுக இந்த தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த திமுக எம்எல்ஏ.. கடும் கோபத்தில் ஸ்டாலின்!!

0

DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும் வலுபெற தொடங்கியுள்ளன. 2026 தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் வருகை. விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்தது முதலே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறி வருகிறார்.

அது மட்டுமல்லாமல், நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதை அனைத்து கட்சிகளும் விமர்சித்து வந்தன. மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களும், இளைஞர்களும், 70 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும், அதிமுக, திமுகவை விட்டு விட்டு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தால், தவெகவின் தொண்டர்களை அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும், தற்குறிகள் மற்றும் வேறு சில தகாத வார்த்தைகளாலும் திமுகவை சேர்ந்தவர்கள் ஊடகங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ எழிலன், தவெகவிற்கு ஆதரவாக ஒரு கருத்தை கூறியிருக்கிறார். தவெகவில் இருப்பவர்கள் ரசிகர் கூட்டமாகவே இருந்தாலும், அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும் என்று கூறினார். மேலும், தவெக இளைஞர்கள் தற்குறி அல்ல, நம்ப பசங்க தான் என்று அவர் கூறியது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இவரின் இந்த கருத்து தவெகவிற்கு சாதகமாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக ஸ்டாலின் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும்.. மறைமுகமாக கூறிய அதிமுக அமைச்சர்!!

0

ADMK TVK:சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல போட்டி போட தொடங்கி விட்டன. இந்நிலையில் திமுகவிற்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ளது தவெக. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறியதால், இது அதிமுகவிற்கு சாதகமாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்றதிலிருந்தே அக்கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் விஜய் கூட்டணி அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்றுணர்ந்த இபிஎஸ் தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாமென திட்டம் தீட்டினார். ஆனால் இபிஎஸ்யின் எதிர்ப்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது.

விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்தும் அதிமுகவும், பாஜகவும் அவரை விடாமல் துரத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக பாஜக மகளிரணி தலைவராக இருக்கும் வானதி ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென கூறுகிறார். அப்படி இருக்க அவரால் எவ்வாறு தனியாக அதனை செயல்படுத்த முடியும். ஒன்று சேர், ஒன்று சேர் என்று சொல்லும் விஜய், தவெக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை அவர் தான் சொல்ல வேண்டுமென கூறினார். இவரின் இந்த கருத்து பாஜக-அதிமுக, தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை ஓயாது என்பதை நிரூபித்தது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜனவரி மாதம் வரை பொறுமையாக இருங்கள் மெகா கூட்டணி அமையும், சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக கூட்டணி அமைப்பதை ஊடகங்களிடம் கூற முடியாது, 2026 தேர்தலுக்கு முன் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கூற்று விஜய்யின் தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தெரிகிறது என்று பலரும் சந்தேகிக்கின்றனர். மேலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஆர்.பி உதயகுமார் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்பதை மேடையில் அறிவித்தும் அதிமுக, விஜய்யை விடாமல் துரத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள விட்டா வேற வழி தெரியல.. சரணடைந்த இபிஎஸ்!! ரீ என்ட்ரியில் சசிகலா OPS!?

0

ADMK: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறார். கட்டாயம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும் என்று எண்ணி பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலர் பரிந்துரை செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக விஜய், சீமான், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார்.

அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. அனால் இவர்களின் கூட்டணி பேச்சு வார்த்தையானது ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதில் கரூரில் 41 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது போல அந்த சம்பவத்தில் இபிஎஸ் ஆதரவு தெரிவித்ததால் அனைவரது கவனமும் இவர்களது கூட்டணி குறித்து தான் இருந்தது. ஆனால் விஜய் ஒருபோதும் ஒத்துப்போகாமல் பழைய நிலைப்பாட்டில் தான் கட்சி செயல்படும் என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் வருத்தமடைந்த எடப்பாடி அதிமுக-வையே மீண்டும் வலுப்படுத்தலாம் என்ற நோக்கில் உள்ளார். அந்தவகையில் தினகரன் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு டம்மி பதவி வழங்கி ஓட்டுக்காக மட்டும் கட்சிக்குள் ஓரமாக உட்கார வைக்க திட்டமிடுகிறாராம். இதற்கெல்லாம் ஒத்து வரும் பட்சத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக கட்சிக்குள் சில முக்கிய தலைகள் பேசி வருகின்றனர். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் வெளியேறியவர்கள் தங்களுக்கு எந்த பதவி வழங்கப்படுகிறது என்பதை பார்த்து தான் தான் முடிவெடுப்பார்கள் என்று மற்றொருபுரம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் கொடுத்த டோஸ்.. கட்சியை விட்டு வெளியேறப்போகும் ஆதவ்!! பரபரப்பில் தவெக!!

0

TVK:தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டிகளை கடந்து நடைபெற இருக்கிறது. அதிமுக திமுக மட்டும் தான் என கால் பதித்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தவெக-வும் அமைந்துள்ளது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட இவருக்கு சற்று அதிகமே. இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சி பல உள்வேலைகளை செய்தது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆளும் கட்சி விஜய்-க்கு எதிராக போர் கொடி தூக்கியது. அதே சமயத்தில் தாவெக சார்பாக அனைத்து கட்சி பணிகளும் துவண்டு கிடந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து கூட்ட நெரிசலில் உயிரிழிந்த  அவர்களை நேரில் சந்தித்து பேசினார். மேற்கொண்டு இது ரீதியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆதாவ் அர்ஜுனா பேசியது குறித்து விஜய் பெரும் கோபத்தில் உள்ளாராம்.

தமிழக வெற்றி கழகத்தின் கோட்பாடுகளை கடந்து பேசியுள்ளதால் இருவருக்கும் இடையே தனிப்பட்ட வாக்குவாதம் நடந்துள்ளதாம். மேற்கொண்டு இதே போல் மேடைகளில் பேசினால் கட்டாயம் கட்சியை விட்டு நீக்கப்படுவீர் என்று விஜய் எச்சரித்துள்ளாராம். இது ரீதியான தகவலானது தமிழக வெற்றி கழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் ஆதவ்வின் நடவடிக்கைகளை வைத்து விஜய் கொடுத்த வார்த்தைக்கு மதிப்புள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக அமைச்சர்.. அடுத்த நீக்கம் இவர் தான்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், அதிமுக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இதனை சமாளிப்பதே இபிஎஸ்க்கு பெரும் பாடாக இருக்கிறது. இபிஎஸ் அதிமுக தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே கட்சி தொடர் தோல்விகளையும், முக்கிய தலைவர்களின் விலகளையும் சந்தித்து வருகிறது.

இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு  செங்கோட்டையனின் நீக்கம். கட்சியின் தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவது இபிஎஸ் வழக்கம். அப்படி அமைந்தது தான் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, தினகரன், செங்கோட்டையனியன் நீக்கம். இவர்களை கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமென்ற பயத்தினால் தான் இபிஎஸ் இவர்களை கட்சியிலிருந்து நீக்கினார் என்ற கருத்தும் வலுபெறுகிறது. இதற்கு மேல் என்ன நடந்தாலும் மீண்டும் இவர்களை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார்.

இப்படி இருக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும்  கட்சியில் இணைப்பது குறித்து பொதுச் செயலாளரிடம் பரிந்துரைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த கருத்து இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இவ்வாறு பேசுவதால் இவரும் இபிஎஸ் எதிர்த்து போர்கொடி தூக்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காராணமாக ஓ.எஸ் மணியன் கூடிய விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று அதிமுகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

அதிமுகவின் அழிவு ஆரம்பம்.. தொண்டர்கள் எடுத்த திடீர் முடிவு!! அப்செட்டில் இபிஎஸ்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத வேகம் 2026 தேர்தலில் இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுக, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேற்றம், பாமகவில் ஏற்பட்டிருக்கும் தந்தை-மகன் பிரச்சனை போன்றவை அரசியல் களம் வேகமேடுதுள்ளதற்க்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்ட பிரிவும், அவர்கள் நால்வர் அணியாக உருவானதும் தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென செங்கோட்டையன் கூறினார். கட்சியின் நலனுக்காக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ். இதனால் இபிஎஸ் மீது கட்சியின் தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.

எனவே அதிமுகவிலிருக்கும் தொண்டர்கள் பலரும், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து 10 வது முறையும் தோல்வியை சந்திக்க அதிமுகவினர் தயாராக இல்லாத காரணத்தினால், நாம் திமுகவாக மாறிவிட்டால் அது வெற்றியாக மாறிவிடும் என்கிற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ். இவரின் இந்த கருத்து அதிமுகவின் அழிவிற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. 

அதிரடி காட்டும் தவெக.. தேர்தல் சின்னத்தை OK செய்த விஜய்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார்.

அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. அந்த வகையில் தேர்தல் ஆணையம் 181 சின்னங்களை வெளியிடும். இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஏற்ப 10 சின்னங்களை தேர்வு செய்து முன்கூட்டியே தரவேண்டும்.

அதிலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கும் சிறப்பு சலுகைகள் உண்டு. அப்படி இருக்கையில் தற்போது அந்த 181 சின்னங்களில் மக்களுக்குள் இணக்கமாகும் வகையில் மட்டைப்பந்து, ஆட்டோ, கடிகாரம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மனுவை இணை பொதுசெயலாளரான சிடி ஆர் நிமல் குமார் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.

மேற்கொண்டு அவர்கள் சின்னம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்து தேர்ந்தெடுப்பர்.  இனி வரும் நாட்களில் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டால் தான் இவர்களுக்கு ஒதுக்கிய சின்னம் உறுதி செய்யப்படும்.

ஒருங்கிணைப்பு குறித்து பாஜக மறைமுக பேச்சு வார்த்தை.. கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK BJP: 2026 யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாமக, அதிமுக போன்ற கட்சிகளிடையே உட்கட்சி மோதல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும், அதிமுகவில் இது உச்ச நிலையை எட்டியுள்ளது என்றே கூறலாம். இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாத பலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது, இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக கழக குரல் எழுப்புபவர்களை இபிஎஸ் கட்சியிலிருந்து அடியோடு நீக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறி விட்டன.

இந்நிலையில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், செங்கோட்டையனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மதிய அமைச்சர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு  நடவடிக்கைகள் குறித்து பேசியது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதிமுகவின் உள்விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த இக்கட்டான நிலையில், நால்வர் அணி உருவானது. இவர்கள் ஒரு அணியாக திரண்டு செயல்பட்டால், அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்கும்.

இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜகவிற்கு இது பின்னடைவை ஏற்படுத்தும். இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை விரட்ட முடியும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக பாஜக தீட்டிய திட்டமாக தெரிகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவிடம் நேரடியாக ஒருங்கிணைப்பு குறித்து பேசாமல் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறி வருகின்றன.