வெள்ளிக்கிழமை, மே 3, 2024
Home Blog

இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!

0

இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும்  ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!

இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சேர்ந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம்தான் திருப்பதி பிரதர்ஸ்.இந்த நிறுவனத்தின் மூலம் தற்பொழுது வரை பையா தீபாவளி வேட்டை பட்டாளம் கும்கி இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.அதன் வரிசையில் உத்தம வில்லனும் ஒன்று.உத்தமவில்லன் படத்திற்கு முன்பாக சூர்யா நடித்த அஞ்சான் படத்தை வெளியிட்டனர்.

ஆனால் அது இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிவாகை சூட வில்லை.இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர் அது முடிவதற்குள்ளேயே உத்தம வில்லன் படத்தை வெளியிடுவதற்காக உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் கடன் வாங்க நேரிட்டது.ஆனால் சரியான நேரத்தில் படம் வெளியிட முடியாத காரணத்தினால் இதுவும் மேற்கொண்டு இவர்களுக்கு கழுத்தை நெருக்கும் அளவிற்கு கடனை தான் கொடுத்தது.

இதனையடுத்த ரஜினி முருகன் திரைப்படமும் வெளியாகுவதில் தாமதமானாளும் மற்ற படங்களை காட்டிலும் இது அவர்களுக்கு வெற்றியை தான் கொடுத்தது.போதிய கடனை அடைத்த போதிலும் அதிலிருந்து அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சினிமா வட்டத்திலும் இவர்கள் அதிக கட ன் சுமையை பெற்றதற்கு உத்தம வில்லன் படம் தான் காரணம் என்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமானது தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, முதலில் நாங்கள் கமல்ஹாசன் அவர்களை மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கத்தான் அணுகியிருந்தோம். மல்ஹாசன் அந்த ரீமேக் மூவியில் நடிக்க மாட்டேன் என்று எங்களிடம் கூறிவிட்டார்.அதற்கு மாறாக என்னிடம் ஒரு கதை உள்ளது அதில் வேண்டுமானால் நடிக்கிறேன் என்று கூறினார்.

நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பட வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டோம்.ஆனால் எங்களிடம் ஒப்புதல் பெற்ற ஒரு வாரத்திலேயே மலையாள படமான திரிஷ்யம் ரீமேக்கில் வேறொருவருக்கு நடித்து தருகிறேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது நான் உங்களிடம் சொன்ன கதையினை இயக்கி தருவதாகவும் அதில் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதன் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் ஒப்புக்கொண்டார்.

இவர் சொன்னதை வைத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்தத்தில் மேற்கொண்டு அது நஷ்டத்தையே கொடுத்தது தயாரிப்பு வேலையின் போதே கமல் மீது பல தடைகள் போடப்பட்டதால் பல சிக்கல்களிலிருந்து இந்த படத்தை வெளியிட்டோம். இதற்காக அதிகளவு கடன் வாங்க நேரிட்டது.மேற்கொண்டு இது குறித்து நாங்கள் அவரிடம் பேசுகையில் அவரது அண்ணன் சந்திரஹாசன் 30 கோடி பட்ஜெட்டில் இதனை ஈடுகட்டும் வகையில் ஒரு படத்தை எடுக்கலாம் என்று கூறினார்.

அதற்காக ஒப்புதல் கடிதத்தையும் எங்களிடம் கொடுத்தனர்.தற்பொழுது உத்தம வில்லன் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதனை கமல்ஹாசன் அவர்கள் நிறைவேற்றி தரவில்லை மேற்கொண்டு உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து  கடன் வாங்கி இந்த படத்திற்காக செலவு செய்ததால் தற்பொழுது நிதி நெருக்கடியில் உள்ளோம் என கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! அதிர்ச்சி கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

0

கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chance of rain in these districts by 1 PM today - Chennai Meteorological Department Announcement!!
Chance of rain in these districts by 1 PM today – Chennai Meteorological Department Announcement!!

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக வருகின்ற ஒன்பதாம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மே மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மே 7ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மே 6-ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

weatherman report may
weatherman report may 2024

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம் என்றும் மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

2ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம்! மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பட்டியலிடுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
.
மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த திமுகவின் ஆ ராசா, ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்த ஒதுக்கீட்டில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

#image_title

அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், புதிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்காக பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் “ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்பதை திருத்தம் செய்யக்கோரி கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நொக்கில் மட்டுமல்லாமல் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது. எனவே ஏல முறைக்கு பதிலாக நிர்வாக நடைமுறைகள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த மனுவை ஏற்க போதிய காரணங்கள் இல்லை என்று கூறி, விசாரணைக்கு பட்டியலிட முடியாது என்று உச்ச நீதிமன்ற பதிவாளர் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! 

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!!
பாஜக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர், போர்பந்தர், ஆனந்த், பதான் உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் “கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு ஒரே ஒரு இரவில் முஸ்லீம்கள் அனைவரும் ஓபிசி பிரிவினர் என்று அறிவிக்கப்பட்டனர். அங்கு முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கின்றது.
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து அதை முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது. நான் உயிரோடு இருக்கும் வரையில் மதத்தின் பெயரை வைத்து இடஒதுக்கீட்டை அமல்படுத்த நான் ஒரு போதும் விடமாட்டேன்.
அரசமைப்பு சாசனத்தை என்னிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துடித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் 2 அரசமைப்பு சாசனங்கள், இரண்டு கொடிகள் இருந்தன. பாஜக கட்சி ஆட்சி அமைந்ததும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக ஒரு அரசமைப்பு சாசனம், ஒரு கொடி என்று அமலுக்கு வந்தது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி கையில் வெடிகுண்டுகளை ஏந்தி நின்றது. பாஜக ஆட்சி ஏற்ற பின்னர் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெடிகுண்டை விட்டு பாத்திரத்தை கையில் ஏந்தி நிற்கின்றது. பாரதத்தில் அதாவது இந்தியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டும் என்று தற்பொழுது மன்றாடி வருகின்றது.
காங்கிரஸின் இளவரசர் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் துடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அழிந்து கொண்டு வருகின்றது. இந்த துக்கத்தை தாங்க முடியாத பாகிஸ்தான் அங்கு அழுது கொண்டு இருக்கின்றது. இதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பு அம்பலத்திற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த வரைக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் எத்தனை தீவுகள் உள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இருந்தது. பாஜக கட்சியின் தலைமையில் நான் பிரதமராக வந்த பிறகு செயற்கைகோள்கள் மூலமாக இந்தியாவின் எல்லை பகுதிகளில் எத்தனை தீவுகள் உள்ளது என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்பொழுது இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் எத்தனை தீவுகள் இருக்கின்றது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கின்றது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கையை போல இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் வோட் ஜிகாத்தில் அனைத்து முஸ்லீம்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்திருந்தார். இவருடைய அழைப்புக்கு இந்தியா கூட்டணியின் எந்தவொரு தலைவரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. மக்களவையை பிளவுபடுத்த நினைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் குஜராத் மக்களவை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று அவர் பேசினார்.

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு வங்கிக்கு அளிப்பதுதான். மதம் அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கே எதிரானது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இது போல பல பாரபட்சமான நோக்கங்கள் இருக்கின்றது. இது பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை பார்க்கும் பொழுது நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையுடன் இருப்பதாக தெரிகின்றது. உங்களுடைய பேச்சு நீங்கள் தற்பொழுது இருக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. உங்களுடைய பொய்களை உங்களின் வேட்பாளர்கள் மூலமாக மக்களிடையே பரப்ப நினைக்கின்றீர்கள்.
பரம்பரை சொத்து வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சி செய்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் பரம்பரை சொத்து வரியை விதிக்க வேண்டும் என்று கூறியது பாஜக கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் தான்.
நீங்கள்(பாஜக) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ன உத்திரவாதம் இருக்கின்றது என்பதை படித்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு வாக்காளர்கள் அனைவரும் புத்திசாலியாக இருக்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டு பாஜக கட்சியின் ஆட்சியில் நீங்களும்(பிரதமர் நரேந்திர மோடி) உங்களுடைய அமைச்சர்களும் சீனாவை திருப்திபடுத்தியதை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். சீனாவை ஊடுருவல்காரர்கள் என்று நீங்கள் இப்பொழுதும் கூறாமல் மறுக்கிறீர்கள். சீனாவில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை என்று நீங்கள் இப்பொழுதும் கூறுவது கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்று உள்ளது.
நடந்து முடிந்த முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு ஆனது குறித்து நீங்கள். மிகவும் கவலைப்படுகிறீர்கள். உங்களுடைய கொள்கைகளாலும் உங்களுடைய பிரச்சாரத்தினாலும் மக்களுக்கு பாஜக கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை இது காட்டுகின்றது.
பாஜக கட்சிக்கு மக்கள் வாக்களிக்க விருப்பமில்லை என்பது கோடை வெப்பத்தினால் நிகழ்ந்தது கிடையாது. உங்களுடைய கொள்கைகள் ஏழை மக்களை எரித்துவிட்டது என்பதே அதற்கு காரணம்.
உங்கள் ஆட்சியில் உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் பற்றி உங்களுக்கு ஏன் பேச விருப்பமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் அனைவரும் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருகிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பத்து ஆண்டுகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த சாதனையை பற்றி பேசி ஓட்டு கேட்கலாமே.
இதை செய்யாவிட்டால் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் நீங்கள் பிரிவினையை தூண்டும் பிரதமராக மாறி விடுவீர்கள். அவ்வாறே நீங்கள் பிரிவினை பிரதமர் என்று ஒருத்தர் இருந்தார் என நினைவு கூறப்படுவீர்கள். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் எங்களுடைய ஓட்டு வங்கிதான்” என்று அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் கூறியுள்ளார்.

எதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?! உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!

உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான கோபத்தினால், உங்கள் இதயம் தான் பாதிப்படையும், முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிறது ஆராட்சி முடிவுகள்.

கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, சில நிமிட கோபம், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாத எண்டோடெலியல் செல்களின் செயல்பாட்டை கணிசமாகக் குறைக்கும்.

சாலை பயணம், வீட்டில், அலுவலகத்தில் சண்டைகள் அல்லது போக்குவரத்தில் எரிச்சல் போன்றவை – நமது இரத்த நாளங்களை வரிசைப்படுத்தும் எண்டோடெலியல் செல்களை பாதிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிப்பது ஏன் இருதய நோய்களைத் தடுப்பதற்கு முக்கியமாகும் என்பதற்கான அறிவியல் அடிப்படையையும் இந்த ஆய்வு வழங்குகிறது.

மக்கள் தினமும் கோபம், பதட்டம், சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உணர்வது பொதுவானது என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த உணர்வுகள் இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்ற உண்மையைப் பற்றி சில ஆராய்ச்சிகள் இருந்தன.

இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த உணர்ச்சிகள் எவ்வாறு வேண்டுமென்றே கிளறிவிடப்பட்டால், அவை எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை.

எனவே, தூண்டப்பட்ட கோபம் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா என்று ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. “எதிர்மறை உணர்ச்சிகளை அனுபவிப்பது – கோபம், பதட்டம் மற்றும் சோகம் உட்பட – பொதுவானது மற்றும் அதிக ஆபத்துடன் தொடர்புடைய இருதய நோய் நிகழ்வுகள்” என்று ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் 280 ஆரோக்கியமான பெரியவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்கள் கோபத்தைத் தூண்டும் நிகழ்வு, ஒரு சோகமான நிகழ்வு அல்லது கவலையைத் தூண்டும் நிகழ்வை நினைவுபடுத்த அல்லது நடுநிலையான பணியில் பங்கேற்க நியமிக்கப்பட்டனர் – இவை அனைத்தும் எட்டு நிமிடங்கள்.

இந்த ஆய்வு பணிகளுக்கு முன்னும் பின்னும் அவற்றின் எண்டோடெலியல் செல்களின் ஆரோக்கியம், எண்டோடெலியம் சார்ந்த வாசோடைலேஷன் உட்பட பல்வேறு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி அளவிடப்பட்டது. இது அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் இரத்த நாளங்கள் எவ்வளவு நன்றாக விரிவடைகிறது என்பதற்கான அளவீடு.

எதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?
angry

நடுநிலை குழுவில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது கோபமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தவர்களிடையே எண்டோடெலியல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை முடிவுகள் காட்டுகின்றன.

“அடிப்படையில் இருந்து 40 நிமிடங்களுக்கு வினைத்திறன் ஹைபர்மீமியா குறியீட்டு மதிப்பெண்ணை மாற்றுவதில் கோபம் மற்றும் நடுநிலை நிலை ஆகியவற்றுக்கு நேரத்தின் மூலம் பெருக்கப்படும் தொடர்பு கொண்ட ஒரு குழு இருந்தது” என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த உணர்வு இதயத்தை அதிகம் பாதித்தது?

கோபம் ஒரு தெளிவான எதிர்மறை விளைவைக் கொண்டிருந்தாலும், கவலை மற்றும் சோகத்தின் உணர்ச்சிகள் எண்டோடெலியல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் காட்டவில்லை.

அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளும் அவற்றின் உளவியல் விளைவுகளில் சமமாக இல்லை என்று இது பரிந்துரைத்தது, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது.

இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவத் துறையின் இருதயவியல் பிரிவில் உள்ள இருதயநோய் நிபுணரும் மருத்துவப் பேராசிரியருமான டாய்ச்சி ஷிம்போ தெரிவிக்கையில், “நாங்கள் படித்த மற்ற உணர்ச்சிகள் அல்ல – நாங்கள் படித்த கோபம் – வாஸ்குலர் ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

மேலும், “எனவே, கோபத்தை நான் ‘கார்டியோடாக்ஸிக்’ என்று அழைக்கிறேன். கோபத்தின் உணர்வுகள் ஏன் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியமான வழிமுறை இதுவாகும்” என்கிறார்.

அதே சமயத்தில் கோபம் நம் இதய ஆரோக்கியத்தில் உண்மையான மற்றும் உடனடி விளைவை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வது, இந்த பொதுவான உணர்ச்சியை நிர்வகிக்க இலக்கு உத்திகள் தேவை என்று ஆய்வு கூறுகிறது.

அன்றாட உணர்ச்சிகள் நீண்டகால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்தன என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை இந்த ஆய்வு எழுப்பியது. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக உணர்ச்சி கட்டுப்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

இந்திய மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எண்டோடெலியல் செல் ஆரோக்கியத்தில் தூண்டப்பட்ட கோபத்தின் கடுமையான விளைவுகளை ஆய்வு செய்த இருதயநோய் நிபுணரும், பல்ஸ் ஹார்ட் சென்டரின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் முகர்ஜி மடிவாடா, மனிதனின் உணர்ச்சிகள், குறிப்பாக கோபம், எண்டோடெலியம் சார்ந்த வாசோடைலேஷனைப் பாதிப்பதன் மூலம் இருதய செயல்பாட்டை நேரடியாக பாதிக்கலாம் என்கிறார்.

melum, உணர்ச்சி ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்துடன், குறிப்பாக இருதய ஆரோக்கியத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்று பரந்த ஆராய்ச்சியுடன் இந்த கண்டுபிடிப்பு ஒத்துப்போகிறது. உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிப்பது உளவியல் நல்வாழ்வுக்கு மட்டுமல்ல, இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கியமானது என்று அவர் விளக்கி உள்ளார்.

உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!
angry jh

உணர்ச்சி மற்றும் உடல் காரணிகளை கருத்தில் கொண்டு ஆரோக்கியத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. மன அழுத்தங்கள் – வேலை, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது எதிர்பாராத வாழ்க்கை மாற்றங்கள் – அதிகரித்த இருதய அபாயத்துடன் தொடர்புடையது என்றும் இதய நிபுணர் கூறியுள்ளார்.

கோபத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் வாதிடுகையில், அது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது.

இந்த செயல்முறை மூளையின் அடிப்பகுதியில் தூண்டப்படுகிறது. இந்த ஆய்வு உடல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்டியுயுள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு மனநலத்தைக் கவனிப்பது மிகவும் முக்கியமானது என்பதையும் உணர்த்தியுள்ளது.

வழக்கமான உடல் செயல்பாடு, சமூக தொடர்புகளைப் பேணுதல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துதல் – தியானம் போன்றவை – இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். எனவே, இதயத்தை பாதுகாக்க கோபத்தை குறைப்போம்.

விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார்.

திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது கால் இடறி ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக கணவர் மற்றும் உறுப்பினர்கள் ரயிலின் அபாய சங்கலியை இழுத்து உள்ளனர். ஆனால் அந்த அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் ரயில் சென்று நின்றுள்ளது. இதனை தொடர்ந்து உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணின் உடலை தேடி அலைந்து உள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் விருதாச்சலம் அருகே அவரின் உடல் மீட்கப்பட்டு, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

உயிரிழந்த கஸ்தூரிக்கு நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், அதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் ரயிலில் அபாய சங்கலி சரிவர செயல்பட்டிருந்தால் கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எது எப்படி ஆனாலும் ரயில் பயணத்தின் போது படிக்கட்டின் ஓரம் நின்று பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. வாந்தி எடுக்கும் சூழ்நிலை வந்தால் பிளாஸ்டிக் கவர்களை கையோடு பயணத்தின் போது எடுத்து செல்வது உகந்தது.

பாதுகாப்பான பயணத்தை அனைவரும் மேற்கொள்வோம். உயிர் இழப்பை தவிர்ப்போம்.

#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!

நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது.

பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் பாஜகவினர் எதிர்பார்த்தது போலவே தினேஷ் சிங் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BJP is trying to destroy Ambedkar's Constitution! Accused by Rahul Gandhi!
BJP is trying to destroy Ambedkar’s Constitution! Accused by Rahul Gandhi!

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது..

அமேதி தொகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.

இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதியை விட்டுவிட்டு, தனது தாயின் தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மேலும், ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிஷோரி லால் ஷர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்பதை காங்கிரஸ் கட்சி மறைமுகமாக அறிவித்துள்ளது.

இந்த தர்பூசணி சாப்பிட்டால் கட்டாயம் கேன்சர் வரும்.. வாங்குவதற்கு முன் இந்த அறிகுறி இருக்கானு செக் பண்ணுங்க!!

இந்த தர்பூசணி சாப்பிட்டால் கட்டாயம் கேன்சர் வரும்.. வாங்குவதற்கு முன் இந்த அறிகுறி இருக்கானு செக் பண்ணுங்க!!

கோடைகாலத்தில் மக்கள் பலரும் இளநீர் தர்பூசணி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவது உண்டு. இவ்வாறு இருமுறை சாப்பிடும் பொருளில் தற்பொழுது கலப்படம் வந்துவிட்டது. இது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு போதிய குழப்பம் நிலவி தான் வருகிறது. அதிக நிறம் உள்ள பணத்தை வாங்கலாமா, பழத்தின் மேல் ஈக்கள் எதுவுமில்லை என்றால் வாங்கலாமா என்ற பல குழப்பங்கள் உள்ளது. தற்பொழுது வரை தர்பூசணி எப்படி வாங்குவது குறித்து தெளிவான விளக்கம் ஏதும் தெரியவில்லை.

இந்த பதிவில் தர்பூசணி எப்படி இருந்தால் வாங்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தர்பூசணி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக போர்க்ளோர் பென்ரான் என்ற ஒருவித இரசாயனத்தை இதில் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்துவதால் தர்பூசணியின் எடையானது மிகவும் பெரிதாக காணப்படும். அதேபோல இது மிகவும் குறுகிய காலத்திலேயே பழமாகிவிடும். அதேபோல அதிக நாட்களுக்கு இது கெட்டும் போகாது. இது மட்டுமின்றி எலக்ட்ரோஷன் என்ற வேதிவினையையும் சேர்ப்பதால் பொதுவாகவே பழமானது வழக்கத்திற்கு மாறான அதிக நிறத்தில் காணப்படும்.

இவ்வாறு அதிக கெமிக்கல்கள் உள்ள தர்ப்பூசணியை சாப்பிடுவதால் நமக்கு விரைவிலேயே நரம்பு தளர்ச்சி பிரச்சனை வந்துவிடும். மேற்கொண்டு பணம் கெட்டுப் போகாமல் இருக்க பலவித கெமிக்கல்களை உபயோகிப்பதால் தலைவலி உண்டாகும் மேற்கொண்டு கேன்சர் வரவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது.

தர்பூசணி பழத்தில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டுபிடிப்பது:

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் தர்பூசணி பழத்தின் சிறு துண்டை போட வேண்டும்.
அந்த தண்ணீரானது எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை என்றால் அது சாப்பிடுவதற்கு உகந்தது.
வழக்கத்திற்கு மாறாக தண்ணீரின் நிறம் மாறினால் அது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

அதேபோல தர்பூசணியை வெட்டாமல் அப்படியே வீட்டில் வைத்தால் ஒரு நாள் முழுவதும் ஆனாலும் அது கெட்டுப்போகாது.
மேற்கொண்டு அதிக கெமிக்கல்கள் கலக்கப்பட்டால் அந்த தர்ப்பூசணி பழம் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது. மிக விரைவிலேயே கெட்டுவிடும்.
தர்பூசணியின் வெளிப்பகுதியில் வெள்ளை அல்லது சிறிதளவு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது இயற்கையாக வளர்ந்த தர்பூசணி என்று அர்த்தம்.

அதேபோல தர்ப்பூசணியின் தண்டு பகுதியானது மிகவும் வறண்டு காணப்பட்டாலும் அல்லது கருப்பு நிறத்தில் காணப்பட்டாலும் அது சாப்பிடுவதற்கு மிகவும் உகந்த பழம் என்று அர்த்தம்.
அதேபோல நீர்ச்சத்து அதிகம் உள்ளது என்று அதிகளவு தர்ப்பூசணியை எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு செரிமான கோளாறு பிரச்சனை உண்டாகக்கூடும்.

வயிற்றில் தொளதொளனு தொங்கும் தொப்பையை குறைக்க மோருடன் இதை மட்டும் சேருங்கள்!! 1 வாரத்தில் 5 கிலோ வரை குறையும்!!

0

வயிற்றில் தொளதொளனு தொங்கும் தொப்பையை குறைக்க மோருடன் இதை மட்டும் சேருங்கள்!! 1 வாரத்தில் 5 கிலோ வரை குறையும்!!

பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவற்றை செய்தும் ஒரு கிலோ கூட குறையாமல் இருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் முறையான உணவு பழக்கத்தை கொண்டு வந்தாலே உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். அந்த வகையில் நாம் துடிக்கும் மோரில் சில பொருட்களை சேர்த்து குடித்து வந்தாலே உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலை 7
புதினா
இஞ்சி

கற்பூரவள்ளி இலையானது நமது உடலுக்கு பல நன்மைகளை தர உதவும்.
அதேபோல புதினா நிலையானது நமது உடல் எடையை குறைப்பதுடன் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது.

செய்முறை:
கற்பூரவல்லி இலை புதினா மற்றும் இஞ்சி இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை அரை டம்ளர் மோரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதில் அரை எலுமிச்சை பழம் சாற்றை சேர்க்க வேண்டும்.
பின்பு சிறிதளவு இந்து உப்பு சேர்க்க வேண்டும்.
தினந்தோறும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு இதனை குடிக்க வேண்டும்.
குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவை முறை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினந்தோறும் குடித்து வர உங்களது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.