ப்ளூ டிக் புதிய வழிமுறைகளுடன் மீண்டும் தொடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!

0
83
Blue Dick is back with new instructions! Elon Musk announced!
Blue Dick is back with new instructions! Elon Musk announced!

ப்ளூ டிக் புதிய வழிமுறைகளுடன் மீண்டும் தொடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் என்பவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.

மேலும் அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாய் இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் புகழ்பெற்றவர்கள் ,பிரபலங்கள் உள்ளிட்டோர் அவரவர்களின் ட்விட்டர் பக்கங்களை அதிகாரப்பூர்வ பக்கங்களாக அறிவிக்க ப்ளூ டிக் என்பதை ரூ 400கட்டணம் செலுத்தி பெற்று வந்தனர்.

இந்நிலையில் எலான் மஸ்க் ப்ளூ டிக் கணக்குகளை பெற செலுத்தும் கட்டணங்களை உயர்த்தினார். இந்த ப்ளூ டிக் கணக்குகளை பெறுவது என்பது சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் சற்று எளிமையானதும் போலி கணக்குகளை பரப்புபவர்களும் ப்ளூ டிக் கணக்குகளை பெற கட்டணம் செலுத்தி போலி தகவல்களை அதிகளவு பரப்பி வந்தனர்.

அதனால் ப்ளூ டிக் சேவையை தற்காலிகமாக எலான் மஸ்க் நிறுத்தி வைத்தார்.அதனை தொடர்ந்து பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ப்ளூ டிக்கிற்கு கலர் மாற்றங்களை கொண்டுவந்தார்.அதில் கோல்ட்,க்ரே,ப்ளூ என மூன்று நிறங்களில் செக் மார்க் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

மேலும் இந்த கோல்ட் செக் மார்க் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும்,க்ரே செக் மார்க் அதிகார பூர்வ அரசு கணக்குகளுக்கு ,ப்ளூ செக் மார்க் தனிநபர் கணக்குகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

முதலில் ட்விட்டர் குழுக்கள் அனைத்து கணக்குகளையும் சரிபார்த்து யாருக்கு எந்த கலர் செக் மார்க் வழங்கப்படும் என்று பிரித்து தருவார்கள் என தெரிவித்தார்.இவை பின்பற்ற ஆரம்பித்த பிறகு பிரபலங்களை போல் பெயர் மாற்றினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் ப்ளூ டிக் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.முதலில் வணிக கணக்குகள் அதன் பிறகு அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K