“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி!

0
102

“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி!

நடிகர் போண்டா மணி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக அவரின் சக நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவரை சந்தித்து முழு செலவையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

அதையடுத்து நடிகர் சங்கமும் நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரும் அவருக்கு நிதியுதவி அளித்து உதவி செய்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை முடிந்து இப்போது வீடு திரும்பியுள்ளாராம்.

இந்நிலையில் தான் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த வடிவேலு, தனக்கு நிதியுதவி அளிக்காததும், உடல்நிலை பற்றிக் கூட விசாரிக்கதும் போண்டா மணிக்கு வருத்தத்தை அளித்துள்ளதாம். இதுபற்றி தன் நண்பர்களிடம் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த போது வடிவேலுவிடம் போண்டாமணியின் உடல் நிலை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது வடிவேலு “நல்ல பையன். என்னால முடிந்த உதவிய நான் அவருக்கு செய்வேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.