காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

0
70

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

 

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். இதை அடுத்து சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதாவது நோய் என்று வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று விடுகிறோம். அந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை போட நமக்கு ஏற்பட்ட நோய் குணமாகிவிடும். ஆனால் தவறான மருந்தை செலுத்தினால் உயிருக்கு ஆபத்தாகி விடும். அது போல ஒரு துயர சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

 

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயதுடைய சிறுவன் சூரியப்பிரகாஷ் சிகிச்சைக்காக வாணியம்பாடியில் உள்ள ஒரு மருத்துவராடம் சென்றுள்ளார். அந்த மருத்துவர் காய்ச்சல் ஏற்பட்ட சிறுவன் சூரியபிரகாஷ்க்கு ஊசி போட்டுள்ளார். அந்த ஊசி போட்ட பிறகு மேலும் சிறுவன் சூரியபிரகாஷ்க்கு அதிகம் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அந்த மருத்துவரின் பெயர்  கோபிநாத் என்பதும், அவர் எம்.பி.பி.எஸ் படிக்காத போலி மருத்துவர் அன்றும் சிறுவனுக்கு தவறான ஊசி செலுத்தியதால் சிறுவன் சூரியப்பிரகாஷ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவந்தது. இதையடுத்து போலி  மருத்துவர் கோபிநாத் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.