Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

Photo of author

By Rupa

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

Rupa

Breaking: Government school students fainted one after another after eating lunch! Intensive treatment in the hospital!

Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலந்தூர் பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அந்த அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மட்டும் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்து உள்ளனர்.

இதில் பலருக்கு வாந்தியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவமனையில் அனுமதித்தது. மேற்கொண்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மாணவர்கள் ஏன் திடீரென்று மயக்கம் அடைந்தனர் என விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் ஏதேனும் பல்லி போன்றவை விழுந்து விட்டதா என்றவாறும் விசாரித்து வருகின்றனர்.