அரசு ஊழியர்களுக்கு அடித்தது அதிஷ்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

0
72

சென்ற ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சமயத்தில் பணி நாட்களாக அந்த நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு பட்டியலில் இடம் கொடுக்கப் படும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அரசுக்கு 6 ஆயிரத்து 480 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோய் தொற்று சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வுபெறும் தினத்தில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை முற்றிலுமாக தடை செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும். சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கடந்த ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சமயம் பணி நாட்களாக எடுத்துக்கொள்ளப்படும். பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணி வழங்கப்படும் புதிதாக அரசுப் பணியில் பதவி உயர்வு பெறுவதற்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.