சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Photo of author

By Parthipan K

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Parthipan K

ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில்  நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 ஏனென்றால் தற்பொழுது ஊரடங்கு காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமான நேரத்தை நேரத்தை இணையதளத்தில்  செலவிடுகின்றனர்.இந்த விளம்பரங்களை  பார்த்து, சிறியவர்கள் கூட சூதாட கற்றுக்கொள்ள வழிவகுக்கும். 

ஆகையால் இந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.