நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

0
253
#image_title

நெல் கொள்முதல் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், ஏற்கனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி இருந்த நிலையில், தற்போது நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

 

author avatar
Parthipan K