சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

0
73

தமிழ்நாட்டில் கனமழையால் உண்டான வெள்ள சேத பதிப்புகளை பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்குவதற்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், முதல்கட்ட வெள்ள நிவாரணமாக, 2079 கோடியை வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பாக, உள்த்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர் பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய நீர்வளத் துறை அமைச்சக இயக்குனர் தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரி ரணஞ்செய்சிங், அதேபோல மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பு செயலாளர் எம்.வி.என் வரப்பிரசாத், உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பிடித்து இருந்தார்கள். இந்த குழுவை சார்ந்தவர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தார்கள்.

இந்த நிலையில், இந்த குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள சேத பார்வையிடுவதற்காக அவர்கள் தங்கியிருந்த சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் இருந்து நேற்று காலை 9.10 மணி அளவில் கிளம்பினார்கள்.

அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி பலத்த மழைக்கு மத்தியில் மத்திய குழுவினர் வாகனங்கள் அணிவகுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் முதலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு  வீரசெட்டி தெருவில் வெள்ள சேத மதிப்பீட்டுக்கான ஆய்வை செய்தார்கள் அவர்கள் சென்ற புளியந்தோப்பு சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது, தெரிகிறது இதனை ஆறு அமர்ந்தவாறே பார்வையிட்ட மத்திய குழுவினர் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.

புளியந்தோப்பு வீரசெட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது இதனை மத்திய குழுவினர் பார்வையிட்டனர் சொல்லப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயத்தில் வராமல் தற்போது எதற்கு வந்திருக்கிறீர்கள்? என மத்திய உறவினரிடம் கேட்பதற்காக ஒரு சில பெண்கள் அங்கே நின்று கொண்டு இருந்தார்கள் காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு மத்திய குழுவை சார்ந்தவர்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள சில பாதிப்புக்கள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்பட தொகுப்பையும் பார்வையிட்டார்கள். அங்கே காலை 9.50 மணி அளவில் இருந்து 9.58 மணி வரையில் அதை பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து மத்திய குழுவைச் சார்ந்தவர்கள் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு மத்திய குழுவை சார்ந்தவர்கள் திருவிக நகர் மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். அங்கே அவர்களுக்கு மாநகராட்சி சார்பாக தேநீர் விருந்து வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து மத்திய குழுவை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தொதியான கொளத்தூர் பகுதிக்கு வருகை தந்தார்கள் அங்கே நடந்த இளங்கோ சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலையில் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு இந்த பணி நடந்து வந்தது எவ்வளவு ஆழம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது என்பதை மத்திய குழுவை சார்ந்தவர்கள் கடப்பாறையை விட்டு ஆய்வு ஆய்வு செய்தார்கள். இந்த பகுதியில் காலை 11 மணி முதல் 11.18 வரையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொடர்பு அதிகாரியாக வாணிப கழக பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றார்கள்.

அவர்களும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அவர்களும் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத பாதிப்பு தொடர்பாக விளக்கம் கொடுத்தார்கள்.

சென்னையில் சுமார் நான்கு பகுதிகளில் ஆய்வை முடித்துக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் பகுதிக்கு மத்திய குழுவினர் வருகை தந்தார்கள். அங்கே குடியிருப்பு பகுதிக்குள் அடையாறு ஆற்றில் நீர் செல்வதைத் தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன இதனை நேரில் பார்வையிட்ட மத்திய குழுவை சார்ந்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பின் போது உண்டான சேருங்கள் தொடர்பான புகைப்படங்களை ஆய்வு செய்தார்கள்.

அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் மற்றும் அதிகாரிகள் வெள்ள சேத பாதிப்புகள் தொடர்பாக மத்திய குழுவிடம் புகார் தெரிவித்தார்கள். விவசாயிகள் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடமும், மத்திய குழுவினர் வெள்ள சேத பாதிப்புகள் தொடர்பாக கேட்டுக்கொண்டார்கள்.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சென்ற மத்திய இது அங்கே இருக்கக்கூடிய தனியார் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார்கள்.

அதன்பிறகு இலத்தூர் ஒன்றியம் வடபட்டினம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டிருந்தார்கள், அதன் பின்னர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு நேற்று மதியம் புதுச்சேரி புறப்பட்டு சென்றது. அங்கே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது. அதனை அடுத்து இரவில் அங்கேயே தங்கினார்கள்.

இந்த குழுவினர் இன்றைய தினம் காலை 10 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட இருக்கிறார்கள்.

ஆர்.பி.கவுல் தலைமையிலான மற்றொரு புது சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகை தந்து, அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்றார்கள். அங்கே வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார்கள், இதனை தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு சந்தித்த பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டனர் 10 பகுதிகளில் பார்வையிட முடிவு செய்த சூழ்நிலையில், இரவு நேரமானதால் பாதியிலேயே மத்தியகுழு திரும்பியது. இதே குழுவை சார்ந்தவர்கள் வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பு உண்டான இடங்களை இன்று ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவடைந்தவுடன் மத்திய குழுவினர் ஒன்றாக இணைந்து முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.