புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பொதுமக்களின் கவனத்திற்கு!

0
92

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று (08.09.2021) பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

தாம்பரம் மார்க்கத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார
ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்
செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, முற்பகல் 11.00, 11.30, நண்பகல் 12.20, மதியம்
1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி
ரத்து செய்யப்படவுள்ளன.

இன்று முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:

காஞ்சிபுரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
திருமால்பூா்-சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சாரரயில் ஆகிய
இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக இரண்டு ரயில்கள்
இயக்கப்படவுள்ளன. இதற்கு மாற்றாக இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளன, ஒரு ரயில் காஞ்சிபுரத்திலிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு புறப்பட்டு,சென்னை கடற்கரையை அடையவுள்ளது. மற்றொரு ரயில்,திருமால்பூரில் இருந்துநண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை அடையும் என சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K