செக் பவுன்ஸ் தொடர்பான புதிய கெடுபிடிகள்! இனி யாரும் ஏமாற்ற முடியாது!

0
119

இணையதள பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் காசோலைகள் அதாவது, செக் என்பது இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரையில் காசோலை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பணம் எடுக்க வேண்டும் பணம், டெபாசிட் செய்ய வேண்டும், அடுத்தவரிடம் பேமென்ட் பெற வேண்டும், அல்லது கொடுக்க வேண்டும் என்று அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள் தான் புழக்கத்தில் இருந்தனர். காசோலைகளை தாங்கள் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பொழுது சில காரணங்களுக்காக காசோலைகள் நிராகரிக்கப்படும்.

இதுதான் செக் பவுன்ஸ் என்று தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் வங்கி கணக்கில் போதுமான தொகை இல்லை என்றால் செக் பவுன்ஸ் ஆகும். ஆனால் இதற்கு வேறு சில காரணங்களாலும் செக் ரிட்டன் செய்யப்படும். என்னதான் இணையதள பரிவர்த்தனைகள் யு பி ஐ ,கியூ ஆர் கோடுகள் என்று நவீனமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் தற்போது கூட பெரிய பெரிய தொகைகளுக்கு காசோலைகள் தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக செக் பவுன்ஸ் தொடர்ந்து காணப்படுகின்றன. செக் பவுன்ஸ் தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளனர்.

ஒரு நபர் காசோலை வழங்கி அவர் வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் அவருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தொடர்பாக நிதியமைச்சகம் தெரிவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் இது தொடர்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து ஒரு நபர் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகிவிட்டால் அவருடைய வேறு கணக்குகளில் இருக்கும் தொகையை பயன்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் அவருக்கு புதிய வங்கி கணக்குகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படும் உள்ளிட்டவை பரிசீலணையில் இருக்கிறது.

பொதுவாக கணக்கில் பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது என்பது ஒரு சட்டப்படி குற்றம் நீங்கள் ஒரு நபருக்கு வழங்கி அந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று தங்களுக்கு வழங்கிய செக் கணக்கில் தொகை இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டால் நீங்கள் காசோலை கொடுத்தவரின் மேல் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் அமல்படுத்த இருக்கும் புதிய விதிகளின்படி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு வேறு காசோலை வழங்கியவரின் வேறு கணக்குகளில் இருந்து தொகையை பெறுவதற்கான விதிமுறைகளை அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து நபர்களுக்கும் CIBIL ஸ்கோர் மிகவும் முக்கியமானது நீங்கள் வாங்கிய கடனுக்கு தவணைகளை சரியான முறையில் திருப்பி செலுத்த வேண்டும் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் அதற்கு சரியான தொகையை சரியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதங்களில் ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது செக் பவுன்ஸ் ஆனால் அந்த காசோலை வழங்கிய நபர்களுக்கு அவர்களுடைய கிரெடிட் சோறுடன் அதனை இணைக்கலாம் என்ற யோசனை பரிசீலணையில் இருக்கிறது ஆகவே ஒரு நபர் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகிவிட்டால் அந்த பரிவர்த்தனை எதிர்மறையான பரிவர்த்தனையாக கணக்கிடப்பட்டு CIBIL ரிப்போர்ட்டில் இணைக்கப்படும்.

இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால் செக் வழங்குபவர்கள் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் அனைத்து செக் பவுன்ஸ் நிகழ்வுகளுமே நீதிமன்றம் வரை எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. கணக்கில் பணமே இல்லாமல் செக் தருகிறேன் என்று இனி ஏமாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீரென்று ஏன் புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த விருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். நாடு முழுவதும் செக் பவுன்ஸ் என்று 35,00,000 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. ஆகவே உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் அனைத்து ஜெக் பவுன்ஸ் வழக்குகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.