போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

0
69

இட ஒதுக்கீடு சம்மந்தமாக ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார் இந்த ஆணையத்தின் தயார் செய்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று எல்லோராலும் போற்றப்படும் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல காலகட்டங்களில் பல கோரிக்கைகளை வைத்து இருக்கின்றார்கள் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது இதனுடைய பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கின்றது அதோடு 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில் இந்த வழக்கையும் எதிர்கொள்ள இதுபோன்ற புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியமாக தேவைப்படுகிறது ஆகவே தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரத்தை சேகரிப்பது மூலம் மட்டுமே முழு தகவல் கிடைக்கும்.

சாதிவாரியான தற்போதைய நிலவரப்படி என புள்ளி விபரங்கள் சேகரிக்கும் வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் அமைக்கப்படும்.

ஜெயலலிதா சமூகநீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதையும் அனைவரும் அறிவர் ஆகவே அவர்களுடைய வழியில் செயல்படும் இந்த அரசும் அதே உறுதியான நிலைப்பாட்டில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது.