நாங்க பின் வாங்க மாட்டோம்!. டிரம்ப் விதித்த வரிக்கு பதிலடி கொடுத்த சீனா….

Photo of author

By அசோக்

நாங்க பின் வாங்க மாட்டோம்!. டிரம்ப் விதித்த வரிக்கு பதிலடி கொடுத்த சீனா….

அசோக்

trumph

இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிகிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது சீனா. நீங்கள் 50 சதவீத கூடுதல் வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் என காட்டி இருக்கிறார் சீன அதிபர். இதற்கு டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.