கொரோனா தொற்றால் தொல்லை கொடுத்த சீனா தற்போது எல்லையிலும் சண்டை மூட்டுகிறது..!!

0
207

இந்தியாவின் அருகில் உள்ள பல்வேறு அண்டை நாடுகளில் ஒன்று சீனா. அதில் பாகிஸ்தானை போல சீனாவும் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது.

சீனா கடந்த 2017ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான லடாக்கின் பாங்காக் ஏரி பகுதியில் அத்துமீறி ஊடுருவியது. அதன் பிறகு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் ஊடுருவி தொல்லை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இந்திய-சீனாவின் வடகிழக்கு எல்லையான சிக்கிம் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் லேசான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை சிக்கிம்மின் வடகிழக்கு எல்லையான நகு லா செக்டார் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் நடந்த இந்த சண்டையை அந்தந்த நாட்டு அதிகாரிகள் பேசி தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் இந்த செயல் அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Previous article40 லட்சத்தை கடந்து உயரும் கொரோனா தொற்று : உலக நாடுகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!
Next articleஇந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்று : உயரும் பலி எண்ணிக்கையால் பட்டியல் நீள்கிறது..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here