லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

0
68

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு 😕

இந்திய-சீன பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் சீன ராணுவத்தினர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை ஏரிக்கரை அருகே இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவப்படையினர் 50 பேர் வந்ததாக, இந்திய ராணுவம் தெரிவித்தது .அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்திய படையினரே அத்தி மீறியதாக சீனா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் லடாக் பகுதியில் சீன படைகள் அத்துமீறி இருப்பது குறித்து புகைப்படம் வெளியாகி இருந்தது .இந்த படங்களில் உள்ள சீன ராணுவத்தினர் கைகளில் கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்ட ஈட்டி போன்ற கடும் ஆயுதத்தை ஏந்தி வைத்ததுபோல இருந்தது.

அத்துடன் தானியங்கித் துப்பாக்கியை வைத்து இருப்பது போன்ற படங்கள் பதிவாகியிருந்தது. இந்திய ராணுவ வீரர்களை அப்பகுதியில் உள்ள சீன ராணுவ வீரர்கள் நிறுவப்படவில்லை. ஒருவேளை சீன ராணுவத்தினர் எல்லையை நோக்கி இருந்தால் , பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது போன்ற மற்றொரு வன்முறை சம்பவம் அங்கே நடந்திருக்குமென்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்திய வீரர்கள் எதிர்பாராத வேளையில் சீன ராணுவத்தினர் இரும்பு தடுப்புகள், ஆணின் பாதித்த கூர்மையான ஆயுதங்களுடன் வந்து இந்திய வீரர்களை காயப்படுத்தி 20 பேரை கொன்றது குறிப்பிடத்தக்கது.